சித்தார்த்- சமந்தா ஜோடியாக நடித்த தெலுங்கு படம் 'ஜாபர்தஸ்த்' கடந்த மாதம் ஆந்திரா முழுவதும் இப்படம் ரிலீசானது. தற்போது தமிழில் இதை 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர்.
இதற்கிடையில் 'ஜாபர்தஸ்த்' படத்தை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த யாஷ்ராஜ் பிலிம் என்றபட நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
'பேண்ட் பாஜாபரத்' என்ற படத்தை இந்தியில் எடுத்து வெளியிட்டோம். அதை இயக்குனர் நந்தினி ரெட்டி தெலுங்கில் 'ஜாபர்தஸ்த்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தை தமிழிலும் 'டும் டும் பீ பீ' என்ற பெயரில் டப்பிங் செய்கின்றனர். எங்களிடம் அனுமதி பெறாமல் ரீமேக் செய்துள்ளனர். எனவே இப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெலுங்கு 'ஜாபர்தஸ்த்' படத்துக்கு தடை விதித்தார். டி.வி.டி., சி.டி.யிலும் டி.வி.யிலும் அப்படத்தை வெளியிடகூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் தமிழிலிலும் இப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் சித்தார்த் சமந்தா ஜோடிக்கிடையே காதல் பற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டும் டும் டும்முக்கு கோர்ட் தடை விதித்திருப்பது இந்த ஜோடியின் நிஜ டும் டும் டும்முக்கே தடை விதித்தது போல இருக்கிறது. (எத்தனை முறை வேண்டுமானாலும் லவ் வரும். எத்தனை முறை வேண்டுமென்றாலும் கல்யாணமும் வரும். நல்ல பாலிஸி)
No comments:
Post a Comment