Wednesday 21 December 2011

நண்பன் இசைவெளியீடு் கோவையில் ஏன்?


பாடல் வெளியீட்டு விழாக்களை கோடம்பாக்கத்தின் எல்லையை விட்டு வெளியேharris_jayarajநடத்துவதில் அலாதி ஆனந்தம் கொள்கிறார்கள் சினிமாக்காரர்கள். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் என்று எங்கெங்கோ போய் இந்த ஆடியோ விழாக்களை நடத்தும் சினிமாக்காரர்கள் மத்தியில், நாலு ஸ்டெப் தள்ளி விழாவை நடத்தப் போகிறார் ஷங்கர். இவரது நண்பன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயமுத்துரில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவை ஏன் கோவையில் வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்...
எதிர்வரும் 23 ந் தேதி கோவை எச்ஐடி காலேஜ் வளாகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படத்தின் ஹீரோயினான இலியானாவும் கலந்து கொள்ளப் போகிறாராம். இப்பவே அரங்கத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று விற்க ஆரம்பித்து விட்டார்களாம் சிலர்.
இப்படி ஒரு விழாவை நடத்த முடிவு செய்தவுடன், அதை என்னோட மியூசிக் கான்செர்டுக்கு நடுவில் வச்சா என் நிகழ்ச்சிக்கும் கூட்டம் வருமே என்றாராம் ஹாரிஸ் ஜெயராஜ். உலகம் முழுக்க சுற்றி இப்படி ஒரு இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்திருந்தார் ஹாரிஸ். ஆனால் முதல் நிகழ்ச்சியே படு பெயிலியர். இதனால் அதிருப்தியுற்ற அவர், வெளிநாட்டில் நடைபெறவிருந்த அத்தனை நிகழ்ச்சியையும் கேன்சல் செய்துவிட்டார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வேண்டுகோள்.
ஐயோ பாவம் என்று நினைத்த ஷங்கர், போகட்டும். கோவையிலேயே நிகழ்ச்சியை நடத்துங்க என்றாராம் தயாரிப்பு நிறுவனத்திடம். இங்கிருந்து நிகழ்ச்சிக்கு வர இசைந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஃபிளைட், தங்கும் ஓட்டல்கள் என்று கொள்ளை கொள்ளையாய் பில்லை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்தில்.

வொய் திஸ் கொலவெறிடிக்கு -மல்லிகா ஷெராவத் ஆட்டம்


மல்லிகா ஷெராவத் ஆட்டம். எரிச்சலில் சிம்பு என்றே தலைப்பு வைத்திருக்கலாம்mallikasherawatஇந்த செய்திக்கு. அந்தளவுக்கு இந்த மேட்டரில் புதைந்து கிடக்கிறது ஈகோ. தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டுக்கு வேண்டுமானால் இவர் பட்டு மெத்தையாக இருக்கலாம். செங்கல்பட்டு தாண்டினால், அதாருலே.... இடிச்சு வச்ச இஞ்சியாட்டம் என்று ஈசியாக காமெண்ட் அடித்துவிட்டு கலைந்து போகிற அளவுக்கு மொக்கை ஃபிகர்.
ஆனாலும், ரெண்டாவது தமிழ் பட ரவுண்டுக்காக கிட்டதட்ட 50 லட்சம் செலவு செய்து கூட்டி வரப்பட்டார் சிம்புவின் ஒஸ்திக்காக. மியூசிக்கும் பட்டையை கிளப்பியது. டி.ராஜேந்தரும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய கலாசலா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட மல்லிகா ஷெராவத், அதன்பின் அந்த பாடலையும், சிம்புவையும் மறந்தே போனார்.
இந்த புத்தாண்டுக்கு மும்பையிலிருக்கும் புகழ்பெற்ற ஒரு ஸ்டார் ஓட்டலில் மல்லிகா ஷெராவத்தின் ஆட்டம் இருக்கிறது. ஆனால் இவர் ஆடப்போவது கலாசலா பாட்டுக்கு அல்ல. சிம்புவின் பரம எதிரி, தனுஷ் ஹிட் அடித்திருக்கும் வொய் திஸ் கொலவெறிடிக்குதான் ஆடப் போகிறாராம். இதை கேள்விப்பட்டத்திலிருந்தே எரிச்சலில் இருக்கிறாராம் சிம்பு.
அப்புறம் ஏம்லே வராது கோவாச்சி? 

வைரமுத்துவுக்கு கமல் தந்த பரிசு


விஸ்வரூபம் படத்திற்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.kamal_viramuthuகமலின் காம்பவுண்டில் கபிலனுக்கும் இடம் உண்டு. முத்துக்குமாருக்கும் சேர் உண்டு. ஆனால் வைரமுத்துக்கு மட்டும் எப்போதும் சிம்மாசனத்தை துடைத்து வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு கமலுக்கும் வைரமுத்துக்கும் அழுத்தமான நட்பு இருக்கிறது.
ஆபிசுக்கு வர முடியுமா என்று அழைத்ததும் ஓடோடிப்போனாராம் கவிப்பேரரசு. அவரிடம், வலிமையான வார்த்தைகளோடு ஒரு பாடல் வேண்டும். ஆனால் அது யாரையும் காயப்படுத்தக் கூடாது என்றாராம் கமல். ரெண்டே நாட்களில் அந்த பாடலோடு கமலை மீண்டும் சந்தித்தார் வைரமுத்து. வியந்து போற்றிய கமல், உள்ளேயிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாராம். பிரித்தால், அதற்குள் ஒரு பேனா.
இது சாதாரண பேனா அல்ல. இத்தாலியின் எரிமலை குழம்பிலிருந்து செய்யப்பட்டதாம். ஜி-8 மாநாடுகளில் கூட இதில்தான் கையெழுத்து போடுவார்களாம் தலைவர்கள். இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த பேனாவை கொண்டுதான் மணிரத்னம் படத்திற்கு பாட்டெழுதியிருக்கிறார் கவிஞர்.

கிளம்பினார் சினேகா கேரளாவில் அதிர்ச்சி


வெற்றிலை பாக்கு, வெட்டிங் கார்டு என்று சினேகாவின் அடுத்த ஸ்டெப், இனிக்கsnehaஇனிக்க இல்லறம்தான். ஆனால் விடைபெறுகிற நேரத்தில் வேதனை தருகிறாரே, அதுதான் ஏனென்றே புரியவில்லை என்கிறது கேரள நாட்டிளம் தகவல் ஒன்று. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்ஷன் ‘பவானி’ எவ்விதத்திலும் அட்ராக்ஷன் ஏற்படுத்தவில்லை தமிழ் ரசிகர்களை. புதிய படங்களும் இல்லாமல் மலையாள கரையோரம் ஒதுங்கிய சினேகா, பத்மகுமார் என்ற இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அறுபது வாட்ஸ் புன்னகையோடு செட்டைவிட்டு கிளம்பிய சினேகா, மறுநாள் வரவேயில்லையாம். வாடிப்போன இயக்குனர் சினேகா தங்கியிருந்த இடத்தை செக் பண்ணினால் பார்ட்டி முதல் நாளே அங்கிருந்து எஸ்கேப். இங்கே தமிழில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க அழைத்தார்கள் அல்லவா? அந்த கோச்சடையான் போட்டோ ஷுட்டுக்கு வந்துவிட்டாராம். பிரசாந்துக்கே தங்கையாக நடித்த சினேகா, ரஜினிக்கு தங்கையாக நடிக்கப் போவதை பற்றியா அதிகம் கவலைப்படப் போகிறார்?
சரி போனவர் போகட்டும் என்று சமாதானப்படுத்திக் கொண்ட கேரள யூனிட், சினேகாவுக்கு பதிலாக ஹரிப்ரியாவை நடிக்க வைத்தார்களாம்.