Friday 25 November 2011

வேட்டை வேட்டையாட வருகிறது

ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி ஆகியோரின் நடிப்பில் பரபரப்பாக வேட்டை படத்தை டைரக்டர் லிங்குசாமி எடுத்து வருகிறார்.படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் என் முதல் படம் ஆனந்தம். இது ஒரு மல்டி ஹீரோ-ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பையா வெற்றிக்கு பிறகு, வேட்டை கதையை படமாக்க முடிவெடுத்தேன்.

விஜய்யை இதில் நடிக்க வைக்க பேசினேன், தேதிகள் ஒத்து போகவில்லை, அடுத்து சிம்பு இதில் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் அதுவும் முடியாமல் போனது.

கடைசியில்,வேட்டை ஆர்யாவுக்குன்னு உருவாக்கப்பட்டிருக்கு சும்மா சொல்லக்கூடாது ஆர்யா பிச்சு உதறியிருக்கிறார்.

மேடியை அணுகியபோது,டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ன்னு முதலில் தயக்கம் காட்டினார். ஆனால் திரைக்கதையை படிச்ச உடனே அவருக்கு இருந்த தயக்கம் மறைந்துவிட்டது.ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் இப்போது ஆர்யா-மேடி இருவரும் நண்பர்களாக ரகளை பண்றாங்க என்று டைரகடர் லிங்குசாமி கூறியுள்ளாராம்

தனுஷின் உற்சாகம்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 3 படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இவர் இசையமைத்த “வொய் திஸ் கொலை வெறி டி” காதல் தோல்விப்பாடல் இணையதள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று  வெற்றி பாடலாக ஒலித்து வருகிறது.
காதல் விரக்தியில் வேதனை ததும்ப ஆண்கள் மட்டுமே வொய் திஸ் கொலை வெறி டி பாடலை பாடுவார்களா? ஏன் இளசுகள் வொய் திஸ் கொலை வெறி டா? என்று பாடமாட்டாங்களா? என்று இயக்குனர் ஐஸ்வர்யா வரைக்கும் சிலர் கேள்வி எழுப்பினார்களாம்.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து கூறுகையில், இந்தப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா மேடம், என்னிடம் படத்துக்காக காதல் தோல்வி பாடலைக் கேட்டாங்க, உடனே ஐந்தே நிமிடத்தில் இந்தப்பாட்டுக்கு மெட்டு போட்டு முடிச்சிட்டேன்.
அரை குறை ஆங்கிலம் தெரிந்த தமிழ் இளைஞன், காதல் தோல்வியில் வெம்பி, வெதும்பி பாடுகிற பாட்டை படத்தின் நாயகன் தனுஷ் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
பசங்களை விட பெண்கள் இந்தப்பாட்டை மிகவும் விரும்பிக் கேட்கிறார்கள். இந்தப் பாட்டு யார் மனதையும் காயப்படுத்தாது. காதல் தோல்வியில் காதலன் பாடுகிற பாட்டு அவ்வளவு தான்.
இந்தப்பாட்டு வெற்றி பாடலாக ஒலிப்பது எனக்கு உற்சாகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Thursday 24 November 2011

காமெடியில் கலக்கும் ஸ்ரீகாந்த்


இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.


பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.

முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.

"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல். 

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம். 

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா. ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.

மடையன் படத்தில் சிம்பு



நடிகர் சிம்புவின் ’ஒஸ்தி’ படம் டிசம்பர் 2ம் தேதி வெளியிடத் தயாராக இருக்கிறது. படத்தை தணிக்கை குழுவினர் தணிக்கை செய்து ” யூ ” சான்றிதழ் வழங்கிவிட்டனர். சிம்பு இப்போது  தனது அடுத்த படமான ‘வேட்டை மன்னன்’ படத்திற்க்காக ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறார்.  சிம்பு தற்போது தனது படங்களின் பெயரின் மூலமே ரசிகர்கள் மனதில் எதிபார்ப்பை உண்டாக்கிவிடுகிறார். வேட்டை மன்னனுக்குப் பிறகு சிம்பு ‘மடையன்’ என்ற படத்தில் டிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சிம்புவின் ண்பரும் இயக்குனருமான இயக்குனர் கணேஷ் இயக்குகிறார். க்ளவுட் நையன் மூவிஸ் தயாரிக்கிறது.

அஜீத் அடுத்த படம்

பில்லா 2 படத்துக்குப் பிறகு அ‌ஜீத் யார் தயா‌ரிப்பில், இயக்கத்தில் நடிப்பார் என்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

பில்ல 2 படத்துக்குப் பிறகு அ‌ஜீத் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அவரது இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்திருக்கும் பன்சா படத்தின் ‌ீமேக்கில் அ‌ஜீத் நடிப்பார் எனவும் புரளி கிளப்பினர். ஆனால் நிஜம் வேறாக இருக்கிறது.

நாகி ரெட்டியின் விஜயா புரடெகசன் சார்பில் அவரது மகன் வெங்கட ரமணா ரெட்டி தயா‌ரிக்கும் படத்தில் அ‌ஜீத் நடிப்பார் என‌த் தெ‌ரிகிறது. இந்தப் படத்தை சிறுத்தையை இயக்கிய சிவா இயக்குவார் எனவும் கூறப்படுகிறது.

Wednesday 23 November 2011

முருகன் சென்டிமென்ட் பார்க்கும் விஜய்

வேலாயுதம், நண்பன் ஆகிய படங்களைத் தொடர்ந்து  தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்துக்கு தலைப்பு தேர்வு செய்வதில் தற்போது பிஸியாக இருகிறார் முருகதாஸ்.  இந்தப்படத்தை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் தனியொரு ஆளாக தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஹீரோயின் யார், வில்லன் யார் என்பதெல்லாம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர் முருகன் சன்னதியில் இருந்து தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமான முருகதாஸ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிகின்றன.

திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பையில்  முடிவதுபோல திரைக்கதை அமைத்து இருக்கின்றாராம் முருகதாஸ். அதேநேரம் படத்தின்  பெரும்பகுதி மும்பையில் நடைபெற இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் படத்தில் நாயகன் கமல் போல நல்ல தாதாவாக விஜய் நடிக்க இருகிறார் என்ற சூடான தகவலைத் தருகிறார்கள் இயக்குனர் வட்டாரத்தில் இருந்து. கதைப்படி இரண்டு ஹீரோயின்கள் தேவை.

படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட இருபதால்  ப்ரியங்கா சோப்ரா மற்றும் 180 படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் ஆகிய இரண்டு பேர் இப்போதைக்கு பரிசீலனையில் இருபதாகச் சொல்கிறார்கள். இம்மாத இறுதியில் முழுவிவரமும் அதிகார பூர்வமாக அறிவிக்க இருகிறாராம் எஸ்.ஏ.சி!

Tuesday 22 November 2011

கன்னடப் படத்தில் நமீதா

கன்னடப்படத்தில் நமீதா நடித்து வெளியாகியுள்ள  ஐ லவ் யூ நமிதா,
ஜெயசிம்ம ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நமீதாதான் நாயகி, நாயகன் எல்லாமே.


இந்தப் படத்தில் கதையில் யோகா டீச்சராக வருகிறார் நமீதா. லவ் காலேஜில் (அதாவது லயோலா ஓரியன்டல் வெர்சடைல் எஜுகேஷன் காலேஜ் என்பதன் சுருக்கமாம்) செக்ஸ் வெறியால் மன நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் யோகா ஆசிரியராக வருகிறார் நமீதா. படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்குப் போதிக்கிறார். நமீதாவின் போதனையால் மனம் மாறும் மாணவர்கள் கல்விதான் முக்கியம், காமம் பிறகுதான் என்பதை உணர்ந்து, திருந்தி, நல்ல ஸ்கோருடன் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். நமீதாவும் அங்கிருந்து திருப்திகரமாக பேக்கப் செய்கிறாராம்.
படத்தில் நமீதாவுக்கு பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சியில் நனைய விட்டிருக்கின்றனர். மற்றபடி படம் முழுவதும் அவர் கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் அதை அழகான கதையோட்டமாக அமைக்காமல் குப்பைத்தனமாக காட்டியிருப்பதால் படம் பப்பரப்பா என்று போயுள்ளது.  நமீதாவின் அதி தீவிர மச்சான்ஸ்கள் இதைப் பார்த்து என்ன கதியாகப் போகிறார்களோ...

விஜய் அடுத்த பட கதாநாயகி

விஜய்யின் அடுத்த படத்தில் ஜோடி என்று அறிவிக்கப்பட்ட  அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டார். இதையறிந்த அனுஷ்கா இப்படத்தில் தனக்கு சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக காஜல் அகர்வாலை படத்திற்கு கமிட் ஆகி விட்டார். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்தார் அனுஷ்கா.  இதனால் தெலுங்கிலும், தமிழிலும் தனக்கு போட்டி நடிகையாக வந்த காஜல் என்ற ஆத்திரத்தில் இருக்கிறார் அனுஷ்கா.

வேட்டையாடு விளையாடு படக்கதை

ராகவன், தமிழக காவல்துறை இணை ஆணையர் ஆவார். இவருடைய நண்பரும் சக அதிகாரியுமான ஆரோக்கியராஜின் (பிரகாஷ்ராஜ்) மகள் ராணி காணாமல் போன வழக்கை விசாரிக்கும் அவர், அப்பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளை இழந்த சோகத்தை கரைக்க நியூயார்க் செல்லும் ஆரோக்கியராஜும் அவரது மனைவியும் தொடர்ந்து திட்டமிட்டு கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். இவ்வழக்கை விசாரிக்க அமெரிக்கா விரையும் ராகவன், அமெரிக்காவில் நிகழ்ந்த சில கொலைகளுக்கும் ராணியின் கொலைக்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டறிகிறார். இதற்கிடையே கணவரைப் பிரிந்து இருக்கும் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான ஆராதனாவைச்  சந்தித்துப் பழகுகிறார். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்க வந்திருக்கும் இளமாறன், அமுதன் ஆகியோரே கொலைகாரர்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் வீடு வரை செல்லும் ராகவனை காயப்படுத்திவிட்டு, கொலைகாரர்கள் இந்தியாவுக்கு தப்புகின்றனர். கொலைகாரர்களை பிடிக்க இந்தியா திரும்பும் ராகவனுடன் ஆராதனாவும் திரும்புகிறார். தன் மனைவி கயல்விழியை (கமலினி முகர்ஜி) தன் பணியின் காரணமாக எழுந்த பகைக்கு பலி கொடுத்த துயரில் இருக்கும் ராகவன், ஆராதனாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார். சிறிய தயக்கத்திற்குப் பின் ஆராதனாவும் இதை ஏற்றுக் கொள்கிறார். கொலைகாரர்களை சிக்க வைக்க ராகவன் எடுக்கும் கெடுபிடிகளால் கடுப்படையும் அவர்கள், ராகவனை தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் வகையில் ஆராதனாவை கடத்திச் செல்கின்றனர். இறுதியில் இளமாறன், அமுதன் ஆகியோரை கொன்று ஆராதனாவை ராகவன் மீட்கிறார்.

Monday 21 November 2011

விஸ்வரூபத்தின் கதாநாயகி

விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடி பூஜா குமார். இவர் நியூயார்க்கில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு நடிகர் கமல் இயக்கி, நடிக்கும் படம் விஸ்வரூபம். ஆரம்பத்தில் படத்தின் நாயகி இல்லாமலே விஸ்வரூபம் படத்தை தொடங்கினார் கமல். தொடர்ந்து சூட்டிங் நடந்து வரும் நிலையில், விஸ்வரூபம் படத்திற்கான நாயகியை உறுதி செய்துள்ளார் கமல்.  விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார் என்றை பெண்ணை கதாநாயகியாக்கியுள்ளேன். அவருக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். நல்ல திறமையான நடிகை,” என்று கூறியுள்ளார்.
இந்த பூஜா குமார் தமிழுக்கு ஒன்றும் புதுமுகம் கிடையாது. இவர் ஏற்கனவே கேயார் இயக்கத்தில் வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தில் நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் சில படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இவர் தற்போது நியூயார்க்கில் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறா

Friday 18 November 2011

விண்ணைத் தாண்டி வருவாயா இந்தியில்!

சிம்பு, த்ரிஷா இருவரும் தங்கள்  திறமையை கொண்டு வெளிவந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்தை கெளதம்மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இதனால் இதனை இந்தியில் தயாரிக்கும் எண்ணத்துடம் இந்தியில் ப்ரதீக் பாப்பர், மதராசப்பட்டிணம் நாயகி எமி  அவர்களை இயக்கி இருக்கிறார்  கௌதம் மேனன் . வரும் ஜனவரி மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.  இதில் என் இதயம் என்ற பாடல் வரி இந்தி பதிப்பிலும் வெளிவருகிறது. 

Thursday 17 November 2011

தனுஷ் 3 படத்தின் பாடல் வரி

தனுசின் 3 படத்தின் கெகாலவரி பாடல்

oh boys i am singing song
soup song
flop song
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri..di

distance la moon-u moon-u 
moon-u  color-u  white-u
white background night-u nigth-u
night-u color-u black-u

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

white skin girl-u girl-u
girl-u heart-u black-u
eyes eyes meet-u meet-u
my future dark

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

maama notes eduthuko
apdiye kaila snacks eduthuko

super maama ready
ready 1 2 3 4

wat a change over maama

ok maama now tune change-u

kaila glass
only english.. 

hand la glass
glass la scotch
eyes fulla tear-u
empty life
girl come 
life reverse gear-u
love love 
oh my love
you show to me pov
cow cow kozhi cow
i want u here now
god i m dying now
she is happy how

this song pass to boys
we dont have choice

why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di
why this kolaveri kolaveri kolaveri di

flop song

மீண்டும் சிக்கல் ஏற்படுத்துகிறார் நயன்தாரா

நயன்தாரா தன் மீது காதலால் நடிப்பை நிறுத்திவிட்டார் என்ற பெருமையில் இருந்த பிரபுதேவாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கெகாடுத்திருக்கிறார் நயன்தாரா.  நயன்தாரா மீண்டும் நடிப்பேன் தெரிவித்ததால்.

ரமலத்தை பிரபுதேவா விவாகரத்து செய்தும்   திருமணம் நடக்கும் என்றே எண்ணிய நயன்தாரா திருமணம் தள்ளிப் பேபானதும் இல்லாமல்,  பிரபுதேவா தனது குழந்தைகளை‌, நயன்தாராவுக்கு தெ‌ரியாமல் சந்தித்துள்ளார். இதனால் கோபமான நயன்தாரா  வீட்டில் பிரபுதேவா சேர்க்கவில்லை.
ஆனால் இதனை மறுத்த நயன்தாரா,  பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக  தெரிவித்தாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை பிரபுதேவா முறித்தால் மட்டுமே திருமணம் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் நயன்தாரா என்று நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக தெ‌ரிவித்தால் மட்டுமே பிரபுதேவாவுக்கு நெருக்கடி கெகாடுக்க முடியும் என்பதால் இப்படி தெரிவிக்கிறார் என்கிறார்கள்  நெருக்கிய வட்டாரங்கள்.

பாட்ஷா 2-இல் அஜீத்தா?...

மங்காத்தாவில் அஜீத் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம்  பாலிவுட்,  கேகாலிவுட்டிலிருந்தும் அஜீத் -க்கு  பாராட்டு வந்த வண்ணம் உள்ளது.
அண்மைக்காலமாக தமிழில் வெற்றி பெற்ற படங்களை கெகாண்டு பாகம் 2 என்ற தலைப்பில் வெளியிடுவார்கள். அந்த வரிசையில் ரஜினி கடந்த பெரும் வெற்றி பெற்ற பாட்ஷா படத்தை  பாட்ஷா 2ம் பாகம் தயாரிப்பில் இருந்து வருகிறார்கள். இதில் ரஜினி நடிக்க வைக்க முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  ஆனால் ரஜினி ராணாவில் நடிப்பதால்,  அதற்கு பதிலாக அஜீத்தை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே ரஜினி தலைப்பில்  பில்லா, பில்லா 2 ஆகிய படங்களில் நடித்த அஜீத், பாட்ஷா 2ம் பாகத்தில் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Tuesday 15 November 2011

மீண்டும் ‘தமிழ்’ மாதிரி சினிமா

தமிழ் சினிமாவை கிண்டல் அடித்த  இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது படத்திற்கான கதை தயாராகி கொண்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ் படத்தில் அனைத்து ஹீரே ஹிட் படங்களையும்  கிண்டல் அடித்தததும் இல்லாமல்  லாலாக்கு.. உட்டாலக்கடி  வரும் சொற்களுடைய முழு பாடலையையும் சேர்த்தும் இல்லாமல், உச்ச கட்ட காட்சியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் தமிழ் படத்தில். தனது அடுத்த படத்தில் தல, தளபதி   படக்காட்சிகளை கிண்டல் செய்கிற மாதிரி திரைக்கதை எழுதியிருக்கிறாராம்.

ரஜினி மீண்டும் வேகம் படப்பிடிப்பில்!

ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. எந்திரன் படத்தை அடுத்து இந்த படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தை தொடங்கும் போதே ரஜினி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது உடல்நிலை தேறியதால் ரஜினி மீண்டும் படப்பிடிப்பு கலந்து கொள்கிறார். இப்படத்தை  கே.எஸ். ரவிகுமார்  இயக்குகிறார். ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.   இந்நிலையில் உடல்நலம் தேறியவுடன் ஷாருக்கானின் ராஒன் படத்திற்காக ஒரு சில மணிநேரம் நடித்தார். பின்பு சென்னையில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு  கமல்ஹாசன் போல் கேரக்டர் ஆர்டிஸ்ட்  கிடையாது. எனது பலமே வேகம் தான். உடலில் வேகம் இருக்கும் வரை  நடிப்பேன் என்றார். இந்நிலையில் பெங்களூரில் ராணா படப்பிடிப்பிற்காக  ரஜினி பெங்களூருக்கு சென்றார். அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்பில் தீபிகா படுகோனுடான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. தமிழ், தெலுக்கு, இந்தி ஆகிய மொழியில் தாயாராகின்றன.

Monday 14 November 2011

சூப்பர்ஸ்டாருக்கு கார் பரிசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. காரை பரிசாக அளிக்கவிருக்கிறார்
ரா ஒன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார்.   ரஜினிகாந்த் உடல் நிலை குணமாகி நடித்த முதல் படம் ரா ஒன் என்பதால் ரஜினி ரசிகர்களிடையே இந்த படத்திற்கு அமோக வரேவேற்பு இருக்கிறது. தான் கேட்டதற்கு இணங்க கௌரவத் தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்துக்கு ஷாருக் கான் விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபுள்யூ. பரிசாக அளிக்கவிருக்கிறார்.

த்ரிஷாவுடன் நடிப்பது யாருக்கு சந்தோஷம்?

அலை படத்தில் முதல்முறையாக சிம்புவும் த்ரிஷாவும் நடித்தனர். மீண்டும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
 த்ரிஷா பற்றி சிம்பு கூறுகையில், “த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்,” என்றார்.

த்ரிஷா கூறுகையில், “சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்,” என்றார்.

பில்லா 2 அஜீத்தின் வில்லன்


பில்லா 2 படத்தில், வில்லனாக நடிக்கிறார் வித்யூத் ஜம்வால். பாலிவுட்டில் வளரும் நடிகராகத் திகழும் வித்யூத்துக்கு தமிழில் இதுதான் அறிமுகப் படம். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். சக்ரி டோல்டி இப்படத்தை இயக்குகிறார்.
வித்யூத் ஜம்வால் சமீபத்தில் இந்தியில் வெளியான போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்தவர்.   களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மாடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார். இவர் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் கூட.
பில்லா-2 முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் 30நாட்களும், 2ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் 40 நாட்களும் முடிந்து, தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது

சிம்பு படத்தில் நடிப்பாரா ராணா...

சிம்பு அடுத்ததாக நடிக்கப் போகிறார்  வடசென்னை படத்தில் என்பது எல்லாரும் அறிந்ததுதான். இதில் இயக்குனர் வெற்றிமாறன் இன்னொரு கேரக்டர் நடிக்க  தெலுங்கு நடிகர்  ராணாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாம். இதனால் ஆந்திராவிலும் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.
எங்கேயும் எப்போதும் படத்தில் தெலுங்கு ஹீரோ சர்வா நடித்திருந்தார். அதைப்போலவே  தெலுங்கில் வெளியிட இதுவும் ஒரு சிறு உதவியாக இருக்கும் என்கிறார்கள்..

வழக்கு எண் 19 பார்க்கலாமா?

வழக்கு எண் 19 என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலாஜி சக்திவேல்.  பல மாதங்களாக இந்த படத்தை எடுத்துக் கொண்டிருப்பது மிக சிறிய அளவிலான ஸ்டில் கேமிராவில்.தமிழ்சினிமாவின் ட்ரெண்டையே  மாற்றும் வகையில் இந்த படத்தின் கதையும், அதில் நடிக்கும் புதுமுகங்களும்  நம்பிக்கை வைத்துள்ளனர்.  இதில் வெளிவரும் ஸ்டில்களை பார்த்தாலே தெரிகிறது.

விமல் படத்தில் சீமானுக்கு அழுத்தமான கேரக்டர்

மசாலா கபே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விமல். இந்த படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கும் போதே தனது அடுத்தடுத்த படங்களுக்கான இயக்குனர் திருமுருகன், . இவர்தான் விமலின் அடுத்த பட இயக்குனர்.
பின்பு பத்மா மகன்  இயக்கத்திலும் நடிக்கிறார்.  முழுக்க முழுக்க காட்டுக்குள்ளேயே நடக்கவிருக்கும் இந்த கதையில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் சீமான்.

மீண்டும் மணிரத்னம் - கார்த்திக்

தமிழ் படத்தை இயக்கும் முயற்சியில்  மணிரத்னம் ஈடுபட்டிருக்கிறார். கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாகும் இப்படத்தில், இவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது  முடிவு செய்யப்படவில்லை.
ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க அர்ஜுன் சம்மதித்திருக்கிறாராம்  இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏனென்றால் படத்தை நமது மண் வாசனையோடுதான் எடுக்கப் போகிறார் மணிரத்னம்

வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகைகள்

Karthika - Vasundhara - Namitha
தப்பான அட்ரசுக்கு போன தந்தி மாதிரி, அழகிருந்தும் நிராகரிக்கப்படும் நடிகைகள் அநேகம் பேர் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தங்க வேட்டை நடத்தும் வேகத்தோடு வந்த இவர்களுக்கு தகரம் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி, லிப்ஸ்டிக்கும் வெற்று சிரிப்புமாக வாழ்க்கையை முடித்திருப்பார்கள். நாம் பார்க்கும் அநேக துணை நடிகைகள் ஒரு காலத்தில் இன்டஸ்ட்ரியை புரட்டிப் போடும் லட்சியத்தோடு இப்படி ரயிலேறி வந்தவர்கள்தான்.
ஆனால் பெரிய ஹிட் படத்தில் அறிமுகமாகி, அசர வைக்கும் அழகும் கொண்ட சில நடிகைகள் அதன்பின் காணாமல் போனது ஏன் என்று ஆராய்ந்தால் பெரிய கேள்விக்குறியே மிச்சமாகும். சமீபத்தில் வெளிவந்து அந்த வருடத்தின் மாஸ் ஹிட் வரிசையில் இடம் பிடித்த கோ படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தில் நடித்த ராதா மகள் கார்த்திகா, அதன் பின் என்னவானார்? ஆந்திராவுல கூப்பிட்டாக, கேரளாவுல கூப்பிட்டாக என்று பத்திரிகைகளில் அவ்வப்போது பேட்டி வந்ததே ஒழிய அடுத்த படத்திற்கான அறிவிப்பு மட்டும் வரவேயில்லை. நல்லவேளையாக பாரதிராஜாவே கை கொடுத்திருக்கிறார் இப்போது. இவர் இயக்கப் போகும் அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்தில் கார்த்திகாவும் ஒரு ஹீரோயின்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராதா, என்னுடைய இரண்டாவது மகளை சினிமாவில் நடிக்க வைக்கப் போறதா எழுதுறாங்க. உண்மையில் என்னோட முதல் மகளுக்கே சரியான கதையும் பொறுத்தமான புராஜக்டும் அமையல. நிறைய படங்கள் வருது. ஆனால் எல்லாத்தையும் ஒப்புக் கொள்ள முடியாதே என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் கோ படத்திற்கு பிறகு ஆந்திராவில் பத்து படங்களும், தமிழ்நாட்டில் ஐந்தாறு படங்களும் ஹிட் ஆகியிருக்கின்றன. இவையெல்லாம் எப்படி கார்த்திகாவை மறந்தன. அல்லது ராதாவின் கண்களுக்குதான் இந்த படங்கள் சிக்கவில்லையா?
கார்த்திகா நிலைமைதான் இப்படி என்றால் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்த வசுந்தராவின் நிலைமையும் ஏறத்தாழ இப்படிதான். கட்டை குரல், கடைந்தெடுத்த ஆண் பிள்ளைத்தனம் என்று எசகு பிசகு அழகுதான் இந்த வசுந்தரா. சுமார் முன்னு£று நடிகைகளை பேராண்மை படத்திற்காக வரவழைத்த டைரக்டர் ஜனநாதன், இந்த ஆண்பிள்ளை சாயலுக்காகவே வசுந்தராவை தன் படத்தில் நடிக்க வைத்தார். சொல்லி வைத்த மாதிரி பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்(என்று சொல்லப்படுகிறது). அப்படியிருந்தும் அடுத்த படம் என்ன என்று வசுந்தராவை நேரில் பார்த்தால் கேட்க முடியாது. சட்டென்று பதில் சொல்கிற வாய்ப்பு அவருக்கும் இல்லை இப்போது.
அனுயாவின் நிலைமை ரொம்பவே தடுமாற்றம். சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். அப்படத்தின் வெற்றியை நாடறியும். இப்போதும் நகைச்சுவை சேனல்களில் இவருக்கும் ஜீவாவுக்குமான ஏட்டிக்கு போட்டியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் ரசித்துக் கொண்டே இருக்கிறோம் நாள் முழுக்க. அதன்பின் முன்னணி இயக்குனர்கள் தன்னை கொத்திக் கொண்டு போவார்கள் என்று நினைத்திருந்த அனுயாவுக்கு மதுரை சம்பவம் என்ற பட்ஜெட் படம்தான் வாய்த்தது. அப்புறம் ஆளே காணாமல் போனார். விசாரித்தால் சுந்தர்சியுடன் மறுபக்கம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாரே என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இவர்களை சொல்வானேன்? இன்னும் ஐந்தாறு வருடங்களாவது தாக்கு பிடிப்பார் என்று நம்பப்பட்ட நமீதா என்னவானார்? செங்கல்பட்டு தாண்டி போகும்போதெல்லாம் ஏதாவது ஊரில் கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறது போஸ்டர்ஸ். நகைக்கடையில் துவங்கி, சைக்கிள் கம்பெனி வரைக்கும் ரிப்பன் வெட்டு நாயகி நம்ம நமீதாதான். நல்ல கேரக்டரா அமைஞ்சாதான் சினிமா. இல்லைன்னா வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுவேன் என்கிறார் நமீ. மானாட மயிலாட நிகழ்ச்சிக்கே மூடுவிழா நடத்திவிட்டார்கள். இனி சின்னத்திரையில் கூட நமீதாவும் அவரது கவர்ச்சி மந்திரமான 'மச்சான்ஸ்' என்கிற வார்த்தையும் சிக்கவே சிக்காது போலிருக்கிறது.
இன்னும் யோசித்தால் பட்டியல் நீளும். அதனால் இவர்களோடு நிறுத்திக் கொள்வோம்.

காதலிக்க நேரமில்லையாம் ஜீவாவுக்கு

காதலிக்க நேரமில்லை படத்தில் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு  Jeevaபெயர் வைத்திருக்கிறார்கள்.
இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது.
இந்த சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

Saturday 12 November 2011

நயன்தாராவின் தெலுங்கு படம்

ஏ.ஆர்.முருகதாசை பாராட்டி பேசினால் பல்லை உடைப்பேன் என்று எச்சரித்த Nayantharaஆந்திராவின் அலட்டல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் தமிழில் வெளியாகவிருக்கிறது. நான் அப்படி சொல்லவே இல்லை என்று பிற்பாடு அவர் மறுத்துவிட்டார் என்பதால் வம்புக்காகவே காத்திருக்கும் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் மௌனம் காக்க...
ஆந்திராவில் எத்தனையோ படங்கள் வெளியாகிறது. எத்தனையோ படங்கள் ஹிட்டாகிறது. ஆனால் அத்தனையும் இங்கே வெளியிடப்படுவதில்லை. (நல்ல படமாக இருந்தால் நாங்களே காப்பியடிப்போம்ல...) ஆனால் ராமராஜ்ஜியத்தின் மீது அப்படியென்ன கரிசனம்? ரொம்ப சுலபமாக யூகிக்க கூடிய மேட்டர்தான். இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுதான் என்னுடைய கடைசி படம் என்று அவரே அறிவித்திருப்பதால், ஏராளமான ரசிகர்கள் நயனின் கடைசி பர்ஃபார்மென்சை ரசிக்க காத்திருக்கிறார்கள்.
இன்னும் சில வாரங்களில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தை அநேகமாக சென்னையிலேயே கண்டு களிப்பார் நயன்தாரா. ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார் அவர்.

ரவியை அலற வைக்கிறார் அமீர்

கடந்த சில தினங்களாகவே நடக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் ஜெயம் ரவி. Ameerகாலில் ஏற்பட்ட காயங்கள்தான் காரணமாம். ஏதேனும் விபத்தாக இருக்குமோ என்று விசாரிப்பவர்களுக்கு கிடைக்கிற தகவல், அவ்வளவு சந்தோஷப்படுவதாக இல்லை. அவ்வளவும் ஆதிபகவன் படத்திற்காக வாங்கிய அடி.
ஒரு நாளைக்கு ஒரு ஷாட் மட்டுமே எடுத்தால் கூட போதும். அது நினைத்த மாதிரி வரவேண்டும் என்று நினைப்பவர் அமீர். அப்படிப்பட்டவர் இயக்கும் படத்தில் ஃபைட் எப்படியிருக்கும்? விழுந்து புரண்டு விலா எலும்பெல்லாம் நொறுங்கியிருந்தால்தான், அட... பரவால்ல தம்பி என்கிற டைப் அவர். இந்த படத்திற்காக ஜெயம் ரவியை போட்டு புரட்டி எடுத்துவிட்டாராம். டெடிக்கேஷன் என்பதற்காக எவ்வளவுதான் பொறுத்துப் போவது?
அதுவும் இந்த சண்டை காட்சிகளை திரும்ப திரும்ப எடுத்துக் கொண்டிருப்பதால் தடுமாறிப் போனாராம் ரவி. உடல் சார்ந்த வலி ஒருபுறம் என்றால், சில காட்சிகளை சரியாக செய்யவில்லை என்றால் ஸ்பாட்டில் விழும் திட்டுகள் அதைவிட பெரிய வலியை ஏற்படுத்துகிறதாம். எல்லாம் மனம் சார்ந்த வலி.
சாது மிரளுமா? காடு நொறுங்குமா? என்பதுதான் தெரியவில்லை.

சித்ரலேகாவின் சாதனை

'அம்புலி' படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள Lekha Foodsஉணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பூட்டை உடைத்து புன்னகையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
நுங்கம்பாக்கம் ஜம்புலிங்கம் தெருவில் அமைந்திருக்கும் இந்த இணையதள அலுவலகத்தை ஏக தடபுடலாக திறந்து வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் இதயம் நல்லெண்ணை உரிமையாளருமான வி.ஆர்.முத்து.
இதுவரைக்கும் சுமார் 30 ஆயிரம் உணவு முறைகளை வீடியோ, மற்றும் டெக்ஸ்ட் வடிவத்தில் தந்திருக்கும் இந்த இணைய தளம் விரைவில் மூன்று லட்சம் சமையல் குறிப்புகளை தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறதாம். இந்த இணைய தளத்தின் ஆசிரியர் வி.சித்ரலேகா.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும், நெட்டுக்குள் இறங்கி ஒரு சொடுக்கு சொடுக்கினால் போதும். அந்த நாட்டு உணவு முறைகளை முறைப்படி கற்று சமையல் செய்துவிடலாம். அந்தளவுக்கு இந்த தளத்தை அமைத்திருக்கிறார்கள். அசைவம், சைவம், இவ்விரண்டையும் சேர்த்து ஏராளமான உணவு வகைகளையும் கூட இந்த தளத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறோம் என்றார் சித்ரலேகா.

அஜீத்தும் நானும்...

அட... உனக்கும் தெரியுமா என்று ஆச்சர்யப்படுவது ஒரு ரகம். இவனுக்கு கூட Jitheshதெரிஞ்சுருக்கே என்று வேதனைப்படுவது வேறொரு ரகம். இதில் அஜீத் முதல் ரக மனிதர். தனக்கு தெரிந்த மாதிரியே ஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றியும், விமானம் ஓட்டுவது பற்றியும் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஒரு இளைஞரை, 'தம்பி வாப்பா' என்று பேச்சு துணைக்காக அழைத்துக் கொண்டாராம் அஜீத்.
இடம்- ஏகன் படப்பிடிப்பு. அட இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு நியூசா என்று எரிச்சல் படுகிறவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். இப்படத்தின் இயக்குனர் ராஜு சுந்தரத்தின் நண்பரான ஜித்தேஷ் அவரது ஆசைப்படி இந்த படத்தில் பணியாற்ற போயிருந்தாராம். அடிப்படையில் பைலட் படிப்பை முடித்திருக்கிறார் இவர். படப்பிடிப்பில் தம்பி என்ன படிச்சுருக்கே? என்ற அஜீத் விசாரித்தபோது உண்மையை சொன்னாராம். அவ்வளவுதான். அன்றிலிருந்தே ஜித்தேஷின் நண்பராகிவிட்டார் அஜீத்.
நாளும் பொழுதுமாக ஹெலிகாப்டர், விமானம் என்று பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் இருவரும். அஜீத்தை பார்த்து அப்படியே மெல்ல மெல்ல நடிக்கிற ஆசையையும் வளர்த்துக் கொண்ட ஜித்தேஷ், இன்று ஒன்றல்ல, இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லாம் அஜீத் போட்ட ஆர்வ சுழி!
தலக்கோணம் என்ற படத்தில் இவருக்கு ஜோடி ரியா. மார்கழி திங்கள் என்ற படத்தில் இவருக்கு ஜோடி திஷா பாண்டே. இவ்விரு படங்களும் வேக வேகமாக வளர்ந்து வருகிறதாம். கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏற துடிக்கும் ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கிற பஸ் ஸ்டாப் கூத்துப்பட்டறைதான். இவரும் இதே பள்ளியில் பயிற்சியை முடித்துவிட்டு நடிக்க வந்திருக்கிறார்.
தல-தான் ரோல் மாடல் என்கிறார் ஜித்தேஷ். அந்த இடத்தை பிடிக்கணும்னா முழு உடம்பும் போராடிக் கொண்டே இருக்கணும் பிரதர்!

லொக்கேஷன் ரொம்ப முக்கியம் 'செங்காடு' இயக்குனர் கருத்து

ஒரு படத்தின் ஹிட், அப்படம் வெளியாகும் தியேட்டர்களின் முறுக்கு வியாபாரம் Senkadu Directorவரை நிர்ணயிக்கிறது. முறுக்கே இப்படியென்றால் மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டியதுதான். இன்றைய தேதிக்கு ஹாட் கேக் இயக்குனர்களல் ஒருவராக இருக்கிறார் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன். தற்போது கும்கி படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்க, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ராமசாமியும் மிக மிக பிஸியாக செங்காடு என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படத்தின் சிறப்புகளை டஜன் கணக்கில் அடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர். ஆனால் நாம் வியந்தது ஒன்றை பற்றிதான். அடிப்படையில் இவருக்கு சொந்த ஊர் மதுரை. மொத்த கோடம்பாக்கமும் மதுரையை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க, இவர் சைலண்ட்டாக சினிமா யூனிட்டை அழைத்துக் கொண்டு தஞ்சாவூரில் டெண்ட் அடித்துவிட்டார். இதுவரை ஸ்டில் கேமிராவை கூட உருப்படியாக பார்த்திராத குக்கிராமங்களில் செங்காடு படத்தை எடுத்திருக்கிறாராம்.
ஒரு படத்திற்கு லொக்கேஷன் எவ்வளவு முக்கியம் என்பதை மைனா படத்தில் Senkadu Directorபார்த்திருப்பீர்கள். என்னுடைய படத்திலும் அதையேதான் மனதில் வைத்திருந்தேன். நான் நினைத்த கிராமம் தஞ்சாவூரை சுற்றி இருந்தது. அதனால்தான் அங்கு படப்பிடிப்பை வைத்தேன் என்றார் ரமேஷ் ராமசாமி.
இது என்ன மாதிரியான கதை?
இது நான்கு நண்பர்களுக்குள் நடக்கும் காதல் கதை. நண்பர்களுக்குள் துரோகம் நடந்தால் அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற அழுத்தமான திரைக்கதையோடு இந்த படம் உருவாகியிருக்கிறது என்றார் டைரக்டர்.
ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், இந்த படத்தில் சண்டை இல்லையாம். ஐந்து தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ரூபா என்ற பெண்தான் இப்படத்தின் நாயகி.
சென்ட்டிமென்ட்டாக 'ரூபா' சம்பாதிச்சு கொடும்மா ரூபா...

Friday 11 November 2011

சிம்புவின் நண்பர்கள் அரெஸ்ட்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள் பக்தி மான்கள். Simbuகோடம்பாக்கத்தில் விசாரித்தால் சிம்பு இருக்கும் இடமெல்லாம் சிக்கல் இருக்கும் இடம் என்பார்கள் போலிருக்கிறது. இது லேட்டஸ்ட் செய்தி.
சில தினங்களுக்கு முன் ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பார்ட்டி கொடுத்தாராம் சிம்பு. இதில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் உற்சாகத்தில் தன் நிலை மறக்க, ஏகப்பட்ட அடிதடிகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு பூங்காவில் அமைந்துள்ள சில பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டதாம். இதையடுத்து சிம்புவின் நண்பர்கள் மூன்று பேரை சைலண்டாக தூக்கிவிட்டது போலீஸ். இந்த கைது நடவடிக்கை விசாரணைக்கு பிறகு தலை வரைக்கும் நீளலாம் என்பதுதான் தற்போதைய நிலவரம்.
ஒருவேளை இந்த பார்ட்டியில் சிம்புவே இல்லை என்றும் முடிவாகலாம். எது எப்படியோ? மீண்டும் சிம்புவை பற்றி ஒரு செய்தி. அதுவும் வழக்கம் போலவே கெட்ட செய்தி.

விலகினார் பார்த்திபன்

அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. Parthibanஅதற்குள் இந்த படத்தை பற்றி வாய் கிழிய பேச்சும், வகை வகையான செய்திகளும் கோடம்பாக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் இமயம் இயக்குகிற படம் என்பதால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். வயல், வரப்பு, வாய்க்கால் என்று கிராமத்து ராஜாவாக இன்னும் எத்தனை காலம் வலம் வந்தாலும் அவரது பாணிக்கு அப்படியொரு வரவேற்பும் இருக்கிறது ரசிகர்களிடத்தில்.
ஆனால் சினிமாவிலிருக்கிற அத்தனை இயக்குனர்களும் போற்றி புகழும் இந்த இயக்குனர் இமயத்திற்கும், படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட பார்த்திபனுக்கும் என்ன பிரச்சனையோ?
இந்த படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார் பார்த்திபன். தனது ட்விட்டரில் இது குறித்து தெரிவித்திருக்கும் அவர், அதற்கான காரணத்தை மட்டும் சொல்லவே இல்லை. ஒரு வேளை சொல்ல முடியாதளவுக்கு 'சுருக்'கங்கள் இருக்குமோ என்னவோ?

கோடிக்கு ஆசைப்படும் ஹீரோக்கள்

முட்டு சந்துல சிக்குன முரட்டு யானை, திரும்பவும் முடியாம திணறவும் இயலாம தடுமாறுன கதையாகிருச்சு நகுலின் நிலைமை. காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கிடுகிடுவென உச்சாணிக் கிளைக்கு போன நகுல், அதன்பின் ஒரு கோடி, ஒன்றரை கோடி என சம்பளத்தை உயர்த்தியதால், தயாரிப்பாளர்கள் யாருமே அவர் பக்கம் போகவில்லை.
திடீர் வெற்றிடத்தில் சிக்கிக் கொண்ட நகுல், எப்படியோ ஆஸ்கர் ரவிச்சந்திரன் Nakulதயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். நகுல் படத்தின் இன்றைய வியாபாரத்தை கணக்கிட்டால், மிக மிக சின்ன பட்ஜெட்டில்தான் படம் எடுக்க முடியும். ஆனாலும் பெரிய மனசு பண்ணிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை கோடி வரைக்கும் தாராளம் காட்டினாராம். ஆனால் முதல் பத்து நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை கிராஸ் பண்ணிவிட்டாராம் அறிவழகன்.
இதற்கு பிறகு இன்னும் ஐந்து கோடியை இந்த படத்தில் முதலீடு செய்தால், அது நகுலுக்கும் அறிவழகனுக்கும்தான் லாபமாக இருக்குமே தவிர, எந்த வகையிலும் இன்டஸ்ட்ரிக்கு பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்த ரவிச்சந்திரன், பிறகு பார்க்கலாம் வெயிட் பண்ணுங்க என்று படப்பிடிப்பையே நிறுத்திவிட்டார்.
கடந்த சில நாட்களாக கண்ணீரும் கம்பலையுமாக ஆஸ்கர் பிலிம்ஸ் வாசலில் தவம் கிடக்கிறாராம் நகுல். நிலைமை புரியாமல் ஒரு கோடி, ஒன்றரை கோடி என்று ஆசைப்படும் நடிகர்கள் குறிப்பாக விமல், ஜெய், விதார்த் போன்ற வளரும் ஹீரோக்கள் நகுலை பார்த்தாவது திருந்துவது நல்லது

சொல்லால் அடித்த சுந்தரி...

கோடம்பாக்கத்தில் ஒரு குரூப்புக்கு மட்டும் 'சொல்லால் அடித்த சுந்தரி'யாக இருந்தார் சோனா. இப்போது சம்பந்தமே இல்லாமல் இன்னொருவரும் அவ்வாறு புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இந்த பிரச்சனையில் யார் ஐயோ பாவம் என்பதை பின் வரும் பாராக்களில் யூகிக்க...
வெங்கட்பிரபு மற்றும் அவரது தோழர்களுக்கு நெருங்கிய தோழியாக இருந்த சோனா, Sonaஅவர்களை நம்பி சில படங்களையும் தயாரித்தார். அது போதாதென்று வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்தை இயக்கித்தர அட்வான்சும் கொடுத்தார். 'நிழல் சலனம்' என்பார்கள் சினிமாவை. வெங்கட்பிரபுவின் நட்பு வட்டத்தில் நிழலாகவே நடமாடிக் கொண்டிருந்த சோனாவின் மனசில் இப்போது சலனமும், சஞ்சலமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஏன்?
எஸ்.பி.பி.சரண் மீது காவல் துறையில் பாலியல் புகார் கொடுத்தார் சோனா. அதை தொடர்ந்து சோனாவை தனியாக விட்டு விட்டு மற்றவர்கள் ஓரணியில் திரண்டார்கள். இனிமேல் சோனாவுக்கு படம் இயக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த வெங்கட்பிரபு சோனாவிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தருவதாக உறுதியளித்தார். அதன் பின் வழக்கு வாபஸ் பெறப்பட்டு வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டார் சோனா.
ஆனால் சொன்னபடி வெங்கட்பிரபு முழு பணத்தையும் செட்டில் செய்யவில்லையாம். சூர்யா நடிப்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபுதான் இயக்கவிருக்கிறார். இந்த முறை சோனா வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. நேராக ஞானவேல்ராஜாவையே தொடர்பு கொண்டாராம்.
ஒரு தயாரிப்பாளரோட கஷ்டம் இன்னொரு தயாரிப்பாளருக்கு தெரியும். எனக்கு தர வேண்டிய அட்வான்ஸ் தொகையை வட்டியோடு திருப்பி கொடுக்க சொல்லிவிட்டு உங்கள் படத்தை அப்புறம் ஆரம்பிங்க. இல்லையென்றால், நீங்கள் படத்தை ஆரம்பிக்கும் முன்பே நான் சங்கங்களில் புகார் செய்வேன். அது உங்களுக்குதான் கெட்ட பெயர். வெங்கட்டிடம் சொல்லுங்க என்றாராம்.
யாரோ நனைஞ்ச மழைக்கு. யார் யாரோ தும்ம வேண்டியிருக்கே!

ரயில் நேரம் மாற்றம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணத்துக்குச் செல்லும் நள்ளிரவு மின்சார ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதிகாலை 1.20 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - அரக்கோணம் மின்சார ரயில் நவம்பர் 12 முதல் டிசம்பர் 12ம் தேதி வரை ஒன்றரை மணி நேரம் தாமதமாக  செல்லும் என தென்னக ரயில்வே  வெளியிட்டுள்ளது.  ஆவடி - அரக்கோணம் இடையே நடைபெறும் இருப்புப் பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆன்லைனில் பதிவு; மரக்கன்று வீடு தேடி வரும் நாமக்கலில்!

பூமி வெப்பமாவதை தடுக்கவும், தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் மரக்கன்று வனத்துறையினரால், அரசு அலுவலகங்கள், தனியார் நிலங்கள், வீடுகள், தோட்டம், சாலையோரங்களில் மரக்கன்று நடப்பட உள்ளது.
மரக்கன்று பெற விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்திலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். dfonamakkal@yahoo.co.in
விண்ணப்பிக்கும் நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தபின்னரே மரக்கன்றுகள் வழங்கப்படும். வழங்கிய பின் அடிக்கடி வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்வார்கள்.
இத்திட்டத்தின் கீழ் மந்தாரை, மஞ்சள் கொன்றை, ஜகரெண்டா, செண்பகம், மகிழம், இயல்வாகை, தூங்குமூஞ்சி வாகை, புளி, தபிபியா, தங்க அரளி, வாதுமை, ஆத்துமருது, நெல்லி, நாவல், சிசு, புங்கம், வேம்பு, கடம்பம், பொரசு, தோதகத்தி, மலைபூவரசு, கிரிவிலியா, ஸ்பெத்தோடியா, பூவரசு, தேக்கு, மேபிளவர், பேரடைஸ் மரம், தகரை, டபோபியா, கேஸியா, கேஸியா ஜவானிகா, சிசால்பினியா, அரசு, ஆலமரம், பலா ஆகிய 36 வகையான மரக்கன்றுகளை வனத்துறை நடுகின்றனர்.
மரக்கன்று வேண்டுபவர்கள் வரும் 30ம் தேதிக்குள் மாவட்ட வன அலுவலர், நாமக்கல் வன கோட்டம், பழைய ஆட்சியர் பங்களா, நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

பாடலாசிரியர் சுந்தர்.சி

விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஒவியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மசாலா கஃபே'. இப்படத்தை சுந்தர்.சி இயக்க குஷ்புவின் ஆவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக சுந்தர்.சி ஒரு பாடல் எழுதி இருக்கிறாராம். இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் விஜய் " எப்போதும்  பாடலுக்கு சில பாடல் வரிகளை எழுதிக் கொடுப்பார் சுந்தர்.சி.

அப்படி ஒரு பாடலுக்கு கொடுக்கும் போது எனக்கு அந்த வரிகள் மிகவும் பிடித்து இருந்தது. அவரிடம் இந்த வரிகளே அருமையாக இருக்கிறது இதையே வைத்து கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
இயக்குனராகி, நடிகராகி இப்போது பாடலாசிரியரும் ஆகிவிட்டார் சுந்தர்.சி.

உங்களுக்கு மயக்கமா?

மயக்கம் என்ன? படத்தில் தனுஷ் எழுதிய பாடல் வரிகள்

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..

ஏ மச்சி.. உட்ரா…
ஏய்.. என்ன பாட உடுடா..
நா பாடியே தீருவேன்..
சரி பாடி தொல..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வெந்நீருல..

அடிடா அவள.. ஒதடா அவள..
விட்ரா அவள.. தேவையே இல்ல….
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூப்புல தேங்குறேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள..

நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒர்த்தே இல்ல..

தேன் ஊருன நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலையிருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்..

மான் விழி தேன் மொழி, என் கிளி நான் பலி
காதலி காதலி என் ஃபிகர் கண்ணகி..

ஃப்ரெண்ட்ஸு கூடத்தான் இருக்கனும் மாமா..
பிகரு வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..

ஒ.. கனவிருக்கு… கலரே இல்ல,…
படம் பாக்கறேன்.. கதையே இல்ல….
உடம்பிருக்கு உயிரே இல்ல..
உறவிருக்கு, பெயரே இல்ல..

வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி போதும் மச்சான்..

ஹே சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக படுத்துக உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..
குட் நைட்.. குட் நைட்.. அஹ.. ஓகே..
குட் நைட்.. தங்க யு சோ மச் மச்சி..

Thursday 10 November 2011

குழந்தைகள் தினம் நவம்பர் 14

இந்தியா விடுதலைப்பெற்ற பின் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவ.ம்பர் 14 ம் தேதி நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்தார். அதே போல் குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்தனர். குழந்தைகளால் அவர் நேரு மாமா  என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்தார் பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்துவிட்டு சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் துணை நின்றார் இந்தியா சுதந்திரம் பெற்றதும்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். அவர் குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் இவரது ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே என்பதை யாராலும் மறுக்க முடியாது சிறு வயதில் அவர்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களை பொறுத்தே அவர்கள் பெரியவர்களானதும் அதன் விளைவுகள் தெரியவரும். எனவே சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற பல நல்ல பழக்கங்களை தங்களது குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தின் போது அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் ஆனால் அச்சமயத்தில் ஆதரவற்ற அனாதை குழந்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலை மாறி இந்த குழந்தைகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு இத்தினத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டும். இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து கொண்டாடப்படும் கொண்டாட்டம்தான் நேரு நினைத்த உண்மையான குழந்தைகள் தின கொண்டாட்டமாக இருக்க முடியும்

ஜெனிலியாவுக்கு ரெட்


ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் சங்கத்தின் கதவை தட்டும் நடிகர் நடிகைகள் அந்த சங்கம் கேட்கும் சிறு விஷயத்தை கூட மதிப்பதில்லை என்பதற்கு பெரிய உதாரணம் Geneliaஇதுதான். நடிகை ஜெனிலியாவுக்கு தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறது தெலுங்கு நடிகர் சங்கம். ஏன் தெரியுமா? ரொம்ப காலமாகவே சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்களாம்.

அதை லெஃப்ட் காதில் வாங்கி ரைட் காது வழியே வெளியேற்றிவிட்டார் அவர். தலைக்குள் ஏற்றாமல் போன அந்த விஷயத்தால்தான் இப்போது தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது ஜெனிலியாவுக்கு.
தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் நடிகர் சங்க கூட்டம் நடந்தால் மறுநாளே ஒரு அறிக்கை வரும். அதில் தவறாமல் குறிப்பிடப்படும் தீர்மானங்களில் ஒன்று இந்த சந்தா மேட்டர். அந்தளவுக்கு சந்தா விஷயத்திலும், அடையாள அட்டை வாங்கும் விஷயத்திலும் அலட்சியம் காட்டி வருகிறார்கள் நடிகர் நடிகைகள்.
இப்படி வாங்காத நடிகர் நடிகைகளை யாரும் புக் பண்ணாதீர்கள். அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னால் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேளுங்கள் என்று மாறி மாறி எல்லா சங்கத்திற்கும் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது இரு மொழி நடிகர் சங்கமும்

ஸ்ரேயா, த்ரிஷா பயம்


முயல் குட்டி முண்டா தட்டினால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? ஸ்ரேயாவின் உறுதியும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. தெலுங்கானாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர். அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆனதுதான் போன வார டாப் நியூஸ்.
Shreya
இந்த சம்பவம் நடந்து ரெண்டு நாட்கள் கழித்து இதே ஆந்திராவில் படப்பிடிப்பு. நெஞ்சு படபடக்க ஸ்பாட்டுக்கு போயிருந்தார் த்ரிஷா. படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர். இவரது குடும்பமே கோக்கு மாக்கான துப்பாக்கி குடும்பம். த்ரிஷாவின் அச்சத்தை கண்ட ஜூனியர் என்.டி.ஆர், இது நம்ம ஏரியா. ஒரு பய வாய திறக்க மாட்டான். தைரியமா இரு என்றாராம்.
எங்காவது ஸ்டுயோவுக்குள் செட் போட்டு படமாக்கலாமே என்ற த்ரிஷாவின் யோசனையை தனது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் தகர்த்தெறிந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோ சொன்ன மாதிரி அந்த ஏரியா பக்கமே கலவரக்காரர்கள் வருவதில்லையாம். ஜூனியர் என்.டி.ஆரின் நிஜ ஹீரோயிசத்தை கண்டு திறந்த வாயை மூடாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

Wednesday 9 November 2011

ஞானாலயா தெரியுமா? வாருங்கள்...

 வீட்டையே நூலகம் ஆக்கி  ஆலயம் போல காத்து வருகிறார்கள் கிருஷ்ணமூர்த்தி - டேடாரதி தம்பதியர். புதுக்கேகாட்டைக்குள் சென்றவுடனே திருக்கே காகர்ணம் ஊர் மெயின் ரேராட்டில் உள்ள பழனியப்பா நகரில் அமைந்திருக்கிறது. 1800 சதுர அடியில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள்  நிரம்பி இருக்கின்றன.
  

மும்பையில் பார்க்க வேண்டிய இடங்கள்

எலிஃபண்டா குகை, கேட்வே ஆஃப் இந்தியா,டேடாபி கட், ஃபேஷன் வீதி,  ஜூஹூ பீச், மரீன் டிரைவ், மும்பை பங்குச் சந்தை, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், குரேகாவு ஃபிலிம் சிட்டி, ஹாஜி அலி மசூதி, சித்தி விநாயக் கேகாயில், ஹேஹாட்டல் தாஜ் பேலஸ்

ஐஸ்வர்யாராய்க்கு 11.11.11 விசேஷ தினம்

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11-11-11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்கான மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அவருடன் கணவர் அபிஷேக், அமிதாப்பச்சன், மாமியார் ஜேயாபச்சனும் தங்கியுள்ளனர். இவர்களுக்காக 5வது மாடியில் விசேஷ அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் அவருடைய குடும்பத்தினரையே யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் செல்ப்பான் எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கரிகாலன் செட் கவலை தரும் கொசுக்கள்


விக்ரம், செரீன் கான் நடிக்கும் கரிகாலன் படத்தின் ஷுட்டிங் பின்னி மில்லில் நடந்து Zarine Khanவருகிறது. பொதுவாகவே சென்னையில் மழையடித்தால் ஒரு புறம் கொசுக்கள் மிதக்கும். மறுபுறம் மனிதன் மிதப்பான். ரெண்டையும் சகித்துக் கொள்ள டாஸ்மாக் உதவியோடு 'மிதக்கும்' ரசனைவாதிகளும் அதிகம்.
மழைக்காலத்தில் படப்பிடிப்பு நடத்த சவுகர்யமான இடம் இந்த பின்னி மில்தான். மிகப்பெரிய ஏரியாவில் மூடப்பட்ட தளமே இருக்கிறது. இதற்குள் நுழைந்துவிட்டால், மழையாவது இடியாவது. எதுவும் தாக்காது என்ற நம்பிக்கையில் போய் இறங்கிவிட்டார்கள்.
செரீனாவை பார்த்தால் சமானியன் கண்கள் கூட காட்டு கொசுவாக மாறி கடிக்க
துவங்கிவிடும். அப்படியிருக்கும்போது கொசுக்கள் விடுமா? பாய்ந்து குதறிவிட்டதாம்.
(அத்தனை கொசுவும் கலர் கொசுவாகியிருக்குமே?)
இந்த பிரமாண்ட பின்னி மில்லில் இப்போது அக்கம் பக்கத்து ஏரியாவிருந்தும் கூட
கொசுக்களின் கூட்டம் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறதாம். பகலையே கூச வைக்கும் வெளிச்ச விளக்குகள் இருக்கும்போது பிரச்சனையில்லை. இரவில் செட் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாடுதான் திண்டாட்டம். காலையில் ஒவ்வொருவர் முகமும் கொழுக்கட்டையாக வீங்கி போவதால் பின்னி மில் என்றாலே ஜன்னி வந்தது போல் அலறுகிறார்கள் அவர்கள்

லூர்து மேரியை பார்க்கணுமா? வாங்க...


Thambi Vettothi Sundaramமுதல் படம் கற்றது தமிழ். அந்த பெயரை நிலை நாட்டுவதற்காகவே தமிழ் கற்று தேறிவிட்டார் அஞ்சலி. அக்ஷர சுத்தமாக அவர் பேசும் தமிழ் கேட்டால் அதற்காகவே நாலு வெண்பாவை மெனக்கெட்டு எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கலாம்.
தமிழில்தான் தேறியாச்சே, அப்புறம் வட்டார பாஷையில் கலக்க வேண்டியதுதானே?அதிலும் விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசியிருக்கிறாராம் அஞ்சலி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது இன்னொரு அர்ப்பணிப்பு.
கன்னியாக்குமரி பகுதியில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பாத்திரத்தை நிஜமாகவே நேசித்த லூர்து மேரி கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த லூர்து மேரி இப்போதும் உயிருடன்தான் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் பார்ப்பாரா என்பது இருக்கட்டும். லு£ர்துமேரியை பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கிறார் அஞ்சலி.
நடிக்கிறேன்னு இறங்கும்போதே நாலா புறத்திலிருந்தும் கல்வீச்சு. இதில் லூர்துமேரியை பார்க்கப் போறேன் என்று கிளம்பினால் என்னாகும்? 'ஆர்வத்தை அடக்கும்மா' என்று கூறிவிட்டார்களாம் யூனிட்டில்.
அதிருக்கட்டும்... படத்தை பார்த்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் தாணு, வியந்து வியந்து பாராட்டினாராம் இயக்குனர் வடிவுடையானை. படம்னா இப்படிதான் இருக்கணும். பெரிய ஹிட்டாகும் என்று அவர் சொல்ல சொல்ல, பூசாரியோட அருள்வாக்கு கேட்ட மாதிரி பரவசத்தோடு திரிகிறார் வடிவுடையான்

பிரசன்னா - சினேகா மீண்டும் காதல்!


Sneha - Prasannaநடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்துநடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருவரும் இதுகுறித்து முதலில் மறுப்பும் மலுப்பலும் தெரிவித்தனர். ஆனால் இவர்களது காதல் வலுவானது என்பதை இப்போது நிரூபித்து விட்டார்கள். தற்போது சரத்குமாருடன் விடியல் என்ற படத்தில் நடித்து வரும் சினேகா. விளம்பரங்களின் தேவதையாக ஜொழித்து வருகிறார். பிரச்சன்னாவோ தமிழ் சினிமாவின் வெர்சடைல் கலைஞராக, நாயகன், வில்லன் என கலவையாகவும், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் துணிவாகவும் நடித்து வருகிறார்கள். ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்சினிமாவின் முக்கிய ஸ்டாராக இருக்கும் பிரசன்னா, விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமான சினேகாவை முழுமனதோடு விரும்பியிருக்கிறார்.
கோடம்பாக்கத்தின் நிகழ்கால புன்னகை இளவரசி என கொண்டாடப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவர்களது காதல் திருமணம், இருவீட்டாரின் சம்மதத்துடன் முதலில் நிச்சயதார்த்தமும் பிறகு திருமணமும் நடக்கவுள்ளது. ஜனவரி மாதம் திருமணம் என பிரசன்னா வட்டாராங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து நடிகர் பிரசன்னா இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
“ சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்," என்று கூறியிருக்கிறார். 

மீன்குழம்பு... கமல் நினைவலைகள்!


கமல்ஹாசனுக்கு பிறந்த நாள். வாழ்நாள் சாதனையாளரான அவருக்கு நமது இணையதளம் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் கமல் பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்குமல்லவா? ச்சும்மா ஒரு ஜோக்குக்காகதான் இது...
அக்ரஹாரத்தில் வளர்ந்த திமிங்கலம் மாதிரிதான் கமல். பாரதியை போல எல்லாவிதிகளையும் மீறியவரல்லவா? அவருக்கு மீன் குழம்பு என்றால் அப்படி பிடிக்குமாம். அதிலும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி வீட்டில் செய்யும் மீன் குழம்புக்கு அடிமை. அடிக்கடி மயில்சாமியிடம் சொல்லி மீன் குழம்பு வரவழைப்பாராம்.
அவரும் கமல் கேட்டுவிட்டார் என்பதற்காக நல்ல மீனாக தேடி தேடி வாங்கி அதை தன் இல்லத்தரசியிடம் கொடுத்து சமைக்க சொல்வாராம். மண் சட்டியில் தயாராகும் இந்த மீன், அப்படியே சுட சுட கமல் ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Kamal Hassanபல வருடங்களாக தொடரும் இந்த வழக்கம் இடையில் ஒரு நாள் ஜோக்காக முடிந்தது. வேறொன்றுமில்லை, கமல் மீன் குழம்பு கேட்ட தினத்தில் திருமதி மயில்சாமிக்கு உடல்நிலை சரியில்லை. மனைவியை கஷ்டப்படுத்தவும் கூடாது. கமல் மனசும் நோகக்கூடாது என்று கருதிய மயில், பொன்னுசாமி ஓட்டலில் மீன் குழம்பு வாங்கி, அதை தன் வீட்டு மண் சட்டிக்கு ஷிப்ட் பண்ணி, அதே சூட்டோடு கமலிடம் கொடுத்துவிட்டார்.
முதல் கவளத்தை பிசைந்து வாயில் வைத்த கமல், 'பொன்னுசாமி மீன் குழம்பு பிரமாதம்ப்பா...' என்று கூற, மயில்சாமி முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
கமல்னா சும்மாவா?

சிம்புன்னா வேணாம். தெலுங்கு ஹீரோ அலட்டல்


ஒரு தெலுங்கு ஹீரோவையும் கூட்டு சேர்த்துக் கொள்வதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ஸ்டைல் போலிருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தின் சிண்டை பிடித்து குலுக்கி எடுக்கிறது இந்த பழக்கம்.
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்திலும் ஒரு தெலுங்கு ஹீரோவை நடிக்கRaanaவைக்க நினைத்தார்கள். பளிச்சென்று வெற்றிமாறனின் மனசுக்குள் வந்தது ராணாவின்
உருவம்தான். அவரை மெனக்கெட்டு சென்னைக்கே வரவழைத்தார்கள். ஒரு காபி கஃபேயில் உட்கார வைத்து கதையையும் சொன்னார் வெற்றி மாறன்.
உங்க ஆடுகளம் பார்த்திருக்கேன். அதற்கு முன்னாடி பொல்லாதவன் பார்த்துட்டு ஃபீல் ஆயிருக்கேன். ரெண்டு படத்திற்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். இது உறுதி என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த ராணா, ஆமாம்...இந்த படத்தின் மெயின் ஹீரோவாக நடிக்கப் போறது யாரு? என்றாராம்
கடைசியாக.
அங்கேதான் விழுந்தது விக்கலும் சிக்கலும்.
சிம்பு என்றார் வெற்றிமாறன். அப்படியா? ஸாரி... எனக்கு அவர் கூட நடிக்க பிடிக்கலை என்றாராம் ராணா. எந்த அரையிருட்டில் எங்கு முட்டிக் கொண்டார்களோ, ரெண்டு பேரும்...

சிம்புன்னா வேணாம். தெலுங்கு ஹீரோ அலட்டல்


ஒரு தெலுங்கு ஹீரோவையும் கூட்டு சேர்த்துக் கொள்வதுதான் இப்போதைய தமிழ்சினிமாவின் ஸ்டைல் போலிருக்கிறது. எங்கேயும் எப்போதும் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் கோடம்பாக்கத்தின் சிண்டை பிடித்து குலுக்கி எடுக்கிறது இந்த பழக்கம்.
வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்திலும் ஒரு தெலுங்கு ஹீரோவை நடிக்கRaanaவைக்க நினைத்தார்கள். பளிச்சென்று வெற்றிமாறனின் மனசுக்குள் வந்தது ராணாவின்
உருவம்தான். அவரை மெனக்கெட்டு சென்னைக்கே வரவழைத்தார்கள். ஒரு காபி கஃபேயில் உட்கார வைத்து கதையையும் சொன்னார் வெற்றி மாறன்.
உங்க ஆடுகளம் பார்த்திருக்கேன். அதற்கு முன்னாடி பொல்லாதவன் பார்த்துட்டு ஃபீல் ஆயிருக்கேன். ரெண்டு படத்திற்காக என்ன வேணும்னாலும் செய்யலாம். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். இது உறுதி என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த ராணா, ஆமாம்...இந்த படத்தின் மெயின் ஹீரோவாக நடிக்கப் போறது யாரு? என்றாராம்
கடைசியாக.
அங்கேதான் விழுந்தது விக்கலும் சிக்கலும்.
சிம்பு என்றார் வெற்றிமாறன். அப்படியா? ஸாரி... எனக்கு அவர் கூட நடிக்க பிடிக்கலை என்றாராம் ராணா. எந்த அரையிருட்டில் எங்கு முட்டிக் கொண்டார்களோ, ரெண்டு பேரும்...