Monday 26 March 2012

சங்கீத பிட்டு,சம்மதித்தார் நயன்

தாம்பூலத்தை மென்று தாம்பாளத்தில் துப்பினாலும், அதையும் ஆரத்தியா மதிச்சு ஆராதிக்கறதுதான் Simbu - Nayantharaகாதலின் சக்தி. இந்த சக்தி இப்போது இன்னும் முத்திப் போயிருக்கிறது சிம்புவிடம். இல்லையென்றால் பழைய பாசத்தில் வலை வீசிக் கொண்டிருப்பாரா?
இவரே இசையமைத்து பாடிய லவ் ஆங்த்தம் ஆல்பத்தில் வருகிற ஒரே ஒரு சங்கீத பிட்டுக்கு நயன்தாராவை ஆட அழைத்தாராம். படத்தில் என்னோடு சேர்ந்து நடிக்கலைன்னாலும் பரவாயில்லை. இந்த ஆல்பத்தில் ஒரு சீனுக்கு தலை காட்டினால் போதும் என்றாராம். இவ்வளவுக்கு பிறகும் கர்ஜனை செய்ய நயன் என்ன லயனா?
வரம் கொடுக்க தயாராகிவிட்டதாம் தேவதை.
சிம்பு பொண்ணு பார்க்கிற நேரத்தில் இதென்ன புது கலாட்டா?

அந்தகால ஸ்ரீதேவி அடங்காத சர்ச்சை ஒன்று

யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் 'அந்தகால' ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை Srideviகடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு.
பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள்.
மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், 'இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல' என்கின்றன.
மயிலு... ஒரு தடவ பழைய படத்தை காட்டும்மா அவங்களுக்கு.