Thursday 19 July 2012

அஞ்சலியா... ஐயய்யோ! அலறும் யங் ஹீரோ


ஏ.சி ரிமோட் கையில் இருந்தும் எக்கச்சக்க அனலில் வாடிக் கொண்டிருக்கிறார்Anjaliவிஷால். 'கலகலப்பு' படத்தை தொடர்ந்து சுந்தர்சி எடுத்துக் கொண்டிருக்கும் 'மதகஜராஜா' படத்தில் விஷால்தான் ஹீரோ. இவருக்கு ஜோடி அஞ்சலி.
படப்பிடிப்பில் அஞ்சலி பக்கம் திரும்புவதே இல்லையாம் விஷால். ஷாட் ரெடி என்றால் மட்டும் கொஞ்சிக் கொள்ளும் இருவரும் 'கட்' என்றதும் காட்டுத்தனமாக விலகி நிற்கிறார்களாம்.
விரல்கள் உரசிக் கொண்டாலே கெமிஸ்ட்ரி, பயாலஜி என்று பீலா விடும் ஜிகினா ஏரியாவில் இப்படி ஒரு அடக்க ஒடுக்கம் எதற்காக? இந்த படத்தின் இன்னொரு ஹீரோயின் விஷாலின் 'வருங்கால வைப்பு நிதி' என்பதால்தான் இத்தனை அலர்ட்டாம்!

அஜீத்தை அதிர வைத்த நடிகர் இது ரிட்டையர்மென்ட் ரிவிட்


அரவிந்த்சாமியும் அஜீத்தும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும்?Aravind Swamyஅழகான இந்த ஃபார்முலாவின் மீது ஜமுக்காளத்தை போட்டு மூடியிருக்கிறார் அரவிந்த் சாமியோவ்... ஏனாம்?
விஷ்ணுவர்த்தன் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையை கேட்டு திருப்தியுற்ற அரவிந்த்சாமி, இந்த கதைக்காக நடிக்கிறேன். அப்படியே சம்பளத்துக்காகவும்தான் என்றாராம். சரி சொல்லுங்க எவ்வளவு? என கேட்ட விஷ்ணுவுக்கு விலா எலும்பே ஸ்கிப் ஆகிற அளவுக்கு சிரிப்பு. வேறொன்றுமில்லை, ரெண்டு கோடி கேட்டாராம் அவர்.
தலை தெறிக்க ஓடிய விஷ்ணு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்ல, ஆணியே புடுங்க வேணாம் என்று கூறிவிட்டார் அவர். இப்போது இருபது லட்ச ரூபாய் சம்பளத்தில் அதுல்குல்கர்னி நடித்துக் கொண்டிருக்கிறார்.
பல்லு முளைச்ச சீப்பை கல்லுல வச்சுதான் வாரணும்...

விசா மறுப்பு அழுதார் நயன்தாரா


Nayantharaகடந்த சில வாரங்களுக்கு முன் டோலிவுட், கோலிவுட் ஹீரோக்கள் மொத்த பேரும் துபாயில் நடந்த சைமா திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள். அனுஷ்கா, கார்த்திகா, த்ரிஷா என்று முன்னணி நட்சத்திரங்களுடன் சிம்புவும், தனுஷும் கூட கலந்து கொண்டு கலக்கினார்கள்.
இந்த விழாவுக்கு தானும் போக ஆசைப்பட்டாராம் நயன்தாரா. இவரது விசாவை வேண்டுமென்றே தாமதப்படுத்திய சிலர், கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை என்று கையை விரிக்க ஆற்றாது அழுது தீர்த்தாராம் நயன்.
பின்னணியில் விளையாடிய சதிலீலாவதன்கள் யாரோ?

என்னை ஏன் புறக்கணிக்கணும்? தடுமாறும் பார்வதி ஓமணக்குட்


மழையடிச்சும் சூடு போகல கதைதான் பார்வதி ஓமணக்குட்டனுக்கு. அஜீத்தின்Parvathy Omanakuttanபில்லா -2 படத்தில் அறிமுகமாகும் இவருக்கு அந்த படம் வெளிவருவதற்குள் ஆறேழு படங்களிலாவது நடிக்க அழைப்பு வந்திருக்க வேண்டாமா?
ஆனால் ஒரு மிஸ்டு கால் கூட வரவில்லையாம் எந்தக் கம்பெனியில் இருந்தும். இவர் ஏற்கனவே தமிழில் அறிமுகமான ஒரு படம் பூஜையோடு டிராப். இந்த லட்சணத்தில் இப்படியொரு புறக்கணிப்பு.
இதையெல்லாம் ஜீரணிக்க முடியாத பார்வதி, கோடம்பாக்கத்தில் பழம் தின்று கொட்டை போட்ட மேனேஜர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம்.
இல்லாத பனை மரத்துல ஏறி, பை கொள்ளாம திராட்சை பறிக்கிற சக்தி கனவுக்கு மட்டும்தான் இருக்கு...

ஹெட்வெயிட் இல்லாத ஹெட் லைட் நடிகை...


குங்குமப்பூவும் கொஞ்சம் 'ப்ரா'வும் என்று டைட்டில் வைத்திருந்தால் கூட கொஞ்ச நாட்கள் ஓடியிருக்கும். ஆனால் 'கொஞ்சு புறாவும்' என்று Dhananyaவைத்து விட்டார்கள் அப்படத்திற்கு.
நல்லவேளை, அந்த படத்தினால்தான் நமக்கு தனன்யா கிடைத்தார். அடிப்படையில் மருத்துவம் படிக்கும் மாணவி இவர்.
அகலமான கண்கள், அழகான நாசி என்று பார்த்தவுடன் சட்டென்று பிடித்துப்போகிற முகம் என்பதால், கூரான மூக்கோடு தனன்யாவை கொத்தத் திரிந்தனர் கோடம்பாக்கத்தில். 'நடிப்பு அப்புறம்தான். படிப்பை முடிச்சுர்றேன் முதலில்' என்று தப்பித்து ஓடிய தனன்யாவை வம்படியாக இழுத்து வந்திருக்கிறார்கள் 'வெயிலோடு விளையாடு' படத்தில்.
ஹீரோயினா இந்த பொண்ணை நடிக்க வைக்கலாமே என்று நினைத்து கேட்டபோது, 'படிக்கணுமே சார்' என்றார் தனன்யா. 'நடிச்சிகிட்டே படிம்மா. உன்னை யாரு டிஸ்ட்ரப் பண்ணப்போறா?' என்று கன்வின்ஸ் பண்ணிதான் நடிக்க வச்சோம் என்றார் இப்படத்தின் இயக்குனர் என்.வி.ராம்குமார். தனன்யாவை காதலிக்கும் ஹீரோ, 'அங்காடி தெரு'வின் நாயகன் மகேஷ்.
'இந்த கதையை கேட்கும்போதே நாலு முறை எழுந்திருச்சு வெளியில் வந்து ஃபீல்Veyilodu Vilayaduபண்ணும்படி ஆகிருச்சு. அப்படியே என் கதைங்க அது. படத்தில் நான் ஃபுட் பால் பிளேயரா வர்றேன். கதையே இந்த விளையாட்டை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்டதுதான்' என்றார்.
கார்த்திக் ராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர் என்பதால் சுலபமாக இசைஞானி இளையராஜாவை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார்கள். 'அந்த ஒரு பாடல்ல நான் நடிக்க கொடுத்து வச்சுருக்கணும்' என்றார் மகேஷ்.
பிறக்கும்போதே பளிச்சுன்னு எரியுற ஹெட் லைட்டோட பிறந்திருக்கும் போலிருக்கு... என்று அங்கிருந்த நடிகர் இளவரசு தனன்யாவுக்கு ஒரு ஸ்பெஷல் அறிமுகம் கொடுக்க, அந்த ஹெட் லைட்டை நாலாப்புறமும் சுழற்றி சுழற்றி பேசினார் தனன்யா.
தனன்யாவுக்காக மொட்டை வெயிலா இருந்தாலும் ரசிக்கலாம்!

ஏன் விழுந்தது தர்ம அடி? டாப்ஸி மேட்டரில் திருப்பம்


டாப்ஸியால் அடித்துக் கொண்ட இரு நடிகர்களும் எங்கேயிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இது தொடர்பான Tapseeபரபரப்பும் டக்கென்று அமுங்கிவிட்டது. பெரிய இடத்து சமாச்சாரம். போதும் நிறுத்தி விடலாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அட்வைஸ் போனதாலும் இந்த தகராறு கமுக்கமாகியிருக்கலாம்.
'என்னைக்கு இருந்தாலும் எங்க ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும். மவனே மரியாதையா வாபஸ் வாங்கிரு' என்றும் மகத்துக்கு டார்ச்சர் போனதாக தகவல். முள்ளை முள்ளால எடுக்கிறாங்களோ, கல்லை கல்லால அடிக்கிறாங்களோ, இந்த பிரச்சனையில் மகத் தாக்கப்பட்டது எதனால் என்கிற விஷயம் மட்டும் இப்போது தெள்ளந் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. ஏனாம்?
டாப்ஸியும் மகத்தும் நெருங்கி பழகி வந்த நேரத்தில் டாப்ஸிக்கே தெரியாமல் நிறைய வீடியோ காட்சிகளை எடுத்து வைத்திருந்தாராம் மகத். அதையெல்லாம் யூ ட்யூப்ல போட்டுருவேன் மிரட்டினாராம். இதையெல்லாம் சொல்லி மனோஜிடம் டாப்ஸி அழுததால்தான் இந்த தர்ம அடி விழுந்ததாம்.
ஐயா மகத்து... என்னதான் எக்சாம்ப்பிள் இருந்தாலும் சிம்பு ட்ரீட்மென்ட் சில இடத்துலதான் செல்லும்!

வில்லனாகவும் தயார் ஹீரோவுக்காக ஒரு கேன்வாஸ்


தந்தை யுனிவர்சிடியாக இருந்தால் பிள்ளை டூடோரியல் லெவலுக்காகவாவதுShakthiஇருக்க வேண்டுமல்லவா? இங்கு பல வாரிசு நடிகர்களுக்கு அங்குதான் பிரச்சனை. வரும்போதே வால்டர் தேவாரமாக வருவார்கள். ரெண்டே படத்தில் 'ஏட்டு' போலாகி ஏக்கமாக திரிவார்கள். அப்படிதான் ஆகிவிட்டது பிரபல இயக்குனர் பி.வாசுவின் புதல்வர் ஷக்தியின் நிலையும்.
வந்த புதிதில் அஜீத்தையும் விஜய்யையும் மிக்ஸ் பண்ணிய அழகு என்று வர்ணித்த அதே வாய்கள், அதன்பின் வேறு என்னென்னவோ மாதிரியெல்லாம் பேச ஆரம்பித்திருந்தது. இந்த உண்மையை சற்று லேட்டாக புரிந்து கொண்டிருக்கிறார் ஷக்தி.

கோடம்பாக்கத்தில் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கும் ஷக்தியின் ஆதரவாளர்கள், 'சார் வில்லனா நடிக்கவும் தயாராதான் இருக்காரு. வாய்ப்பிருந்தா சொல்லுங்க' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் ரீலீசுக்கு தயாராக நிற்கிறது.
சார் வில்லனா அறிமுகம் ஆவதற்குள், ஹீரோ என்கிற பீரோவை வந்த விலைக்கு தள்ளிவிடுவதுதான் சேஃப்ட்டி!

சுந்தர்சி இயக்கும் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு


பேட்டை புடிச்சமா, பந்தை அடிச்சமா என்றிருந்த கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் திடீரென்று சினிமா ஆசை உந்தித்தள்ள கிரவுண்டை விட்டு ஃபுளோருக்கு வந்தார். வந்த இடத்தில் Sadagopan Rameshசிக்சர் நிச்சயம் என்று எதிர்பார்த்தால், ஒரு பால் கூட அவர் பேட்டில் சிக்கவில்லை. நல்லவேளை... ஸ்டெம்ப் எகிறாமல் இருப்பது அவரது பூர்வஜன்ம புண்ணியம்.
இவரது முதல் படமான பட்டாப்பட்டி பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருந்தாலும், போஸ்டர் காசு கூட தேறவில்லை என்கிறது கலெக்ஷன் ஏரியா. அதன்பின் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் சுந்தர்சி.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்து வரும் மதகஜராஜா படத்தில் சடகோபன் ரமேஷுக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் கொஞ்சம் கலகலப்பான கேரக்டர். ஆள் பார்க்க முசுடாக இருந்தாலும் கேமிராவுக்கு முன்னால் கலகலப்பாக இருக்கிறார் என்கிறது ஷுட்டிங் ஸ்பாட் தகவல்கள்.
(மதகஜ)ராஜா தயவுல ஒரு சின்ன ராஜ்ஜியத்தையாவது கோடம்பாக்கத்துல புடிச்சுக்கோங்க சடகோபன்.

ரெண்டு சூர்யாவும் ஒரு காஜலும்... ஒரு கலாச்சார கசமுசா?


ஒரு சூர்யா வந்தாலே உற்சாகத்தில் உய்..... யடிக்கிற ரசிகர்கள் ரெண்டு சூர்யா வந்தால் Maatraanஎன்ன செய்வார்களோ? அதைக் காண இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ரிலீஸ் எப்போது என்று உறுதியாக சொல்ல முடியாத நெருக்கடி எதிர்பார்க்கிற நமக்கு மட்டுமல்ல, உருவாக்குற கே.வி.ஆனந்துக்கும் இருக்கிறது.
இரண்டு சூர்யா என்பதால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை எடுக்க வேண்டியிருந்ததாம். என் நிலைமையாவது பரவாயில்லை. ஒவ்வொரு காட்சியையும் பல முறை பார்த்து பார்த்து நறுக்க வேண்டிய நிலைமை எடிட்டர் ஆன்ட்டனிக்கு. அவர் ரெண்டு சம்பளம் கேட்டார் என்றால் பாருங்களேன் என்றார் கே.வி.ஆனந்த்.
ரெண்டு பேர்ல காஜல் யாருக்கு என்ற அடங்க மாட்டாத கேள்வியை அவரிடம் கேட்டால், இப்பவே ஏன் கேட்கிறீங்க அதையெல்லாம்? அதுதான் சார் க்ளைமாக்ஸ் என்றார் அவர். எஸ்கேப் ஆக அவர் நினைத்தாலும் விடுகிற நிலையில் நாம் இல்லை. விசாரித்த வரையில் ரெண்டு பேரோடும் குடும்பம் நடத்த தயாராகிவிடுவாராம் காஜல். இப்படி ஒரு அதிரி புதிரியான க்ளைமாக்ஸ் படத்தில் இருக்குமா? அல்லது கலாச்சாரம், பண்பாடு என்று ஜகா வாங்குவார்களா தெரியாது

அமிதாப்புக்கு ஜோடியாகிறார் குஷ்புவின் அடுத்த ஸ்டெப்!


அறிவாலயத்திற்காக அரசியல், சுய லாபத்திற்காக சினிமா என்று இரட்டை குதிரை சவாரி செய்யும் குஷ்புவுக்கு ரெண்டு குதிரையையும் சரியாக மேய்க்கKushbooதெரிந்திருக்கிறது. மீட்டிங், போராட்டம், ஜெயில், பெயில் என்று சகல வித்தைகளையும் அரசியலில் காட்டிக் கொண்டிருக்கும் குஷ்பு அதற்காக சினிமாவையும் விட்டுவிடவில்லை. இது போதாதென்று மானாட மயிலாடவில் ஜட்ஜ் பொறுப்பும் கூடுதலாக சேர்ந்து விட்டது. (ஏதோ இ.பி.கோவை கரைச்சு குடிச்ச மாதிரி இவங்க பண்ணுற அட்டகாசம்? ஹவ்வவ்வவாஆ....)
எதற்கும் அசராத குஷ்பு இப்போது நடிப்பிலும் இறங்கியிருக்கிறார். தெரிந்த தொழில்தானே, இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்களுக்கு... இவ்வளவையும் கவனித்துக் கொண்டு குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துகிற அம்மாவாக இருப்பது கஷ்டமல்லவா? அதையும் திறம்பட செய்து கொண்டிருக்கிறார் அவர். எவ்வளவுதான் முக்கியமான காட்சியென்றாலும் ஆறு மணிக்கு பேக்கப் சொல்லிவிடுவாராம். அதற்கு பிறகு அது அவரது குழந்தைகளுக்கான நேரம்.
சரி... சென்னையில் இருக்கும்போதுதான் இதெல்லாம் சாத்தியம். இந்தியில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாரே, என்ன பண்ணுவாராம்? இந்த கேள்வி இப்போது ரசிகர்கள் மத்தியில் எழப்போகிறது. டைரக்டர் ரேவதி வர்மா இயக்கவிருக்கும் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் குஷ்பு. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா? அமிதாப்புக்கு!
அம்மாவுக்கு டெல்லி அரசியல் மீதும் ஒரு கண் இருக்கோ, என்னவோ?

பத்து கோடியா, வாவ்... ஒரு விஸ்வரூப பாய்ச்சல்


புதுப்படங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது ஜெயாViswaroopamதொலைக்காட்சி. கோச்சடையான், துப்பாக்கி, மாற்றான் என்று வேகம் காட்டும் ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் மட்டும் சிக்கவில்லை.
காரணம் கமல். ஆரம்பத்திலிருந்தே விஜய் தொலைக்காட்சி மீதுதான் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் தற்போதைய அவரது முயற்சிக்கு முழு மூச்சாக தோள் கொடுத்திருக்கிறதாம் விஜய்.
கமலின் விஸ்வரூபத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள். சுமார் பத்து கோடி என்று காதை கடிக்கிறார்கள். இந்த அடங்காத விலையை கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறது பிற சேனல் வட்டாரங்கள். இதுல பாதி கேஷ் ரொக்கம். மீதி கேஷ் விளம்பரத்துக்கு என்று பிரித்துக் கொண்டார்களாம்.
நிகழ்ச்சியிலும் சரி, மகிழ்ச்சியிலும் சரி, ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்கிற அளவுக்கு சேனலோடு சினேகம் வளர்க்கிறார் கலைஞானி.

கண்டிப்பா கிளாமர் வேணும்... பிடிவாதம் பிடிக்கும் ஸ்ரே


என்னது... படத்துல எனக்கு கிளாமர் ரோல் இல்லையா? அப்படின்னா உங்க படமேshreyaவேணாம்' என்கிற அளவுக்கு திறந்த புத்தமாக திரிபவர் ஸ்ரேயா. அப்படி ஒரு அசாத்திய கொள்கையால் இவர் கைவிட்ட படங்கள் ஆறேழு இருக்கும்.
இந்த கவர்ச்சிக் கொள்கையில் கொசு மருந்து அடித்து ஸ்ரேயாவை லபக்கி விட்டார் டைரக்டர் ரூபா ஐயர். இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'சந்திரா' என்ற படத்தில் ஸ்ரேயாவின் நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் முந்தானை சரிய சரிய ஸ்ரேயா வரும் காட்சிகள் ஒன்றிரண்டு படம் பார்க்கும் ரசிகர்களை ராத்தூக்கம் இல்லாமல் செய்துவிடும் என்கிறார்கள். இந்த சீன்கள் கூட ஸ்ரேயாவின் விருப்பத்தின் பேரிலேயே வைக்கப்பட்டதாம்.
வெத்தல கொடி வேர்ல சுண்ணாம்பை கரைச்சு ஊத்துனா மாதிரிதான் அமையுது சில பொருத்தங்களும்!