Friday 22 March 2013

மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு!


மன்னிக்கறதே வாடிக்கையா போச்சு இந்த அஜீத்துக்கு! ஆமாம்... தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் வலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஒரு காலத்தில் அஜீத்தின் பரமActor Ajithவைரி. (அப்படீன்னா எதிரின்னு அர்த்தங்ணா..) பசையுள்ள நேரத்தில் 'பார்ப்போம் ஒரு கை' என்று அஜீத்திடம் மல்லுக்கு நின்ற ஏ.எம்.ரத்னம் அதன்பின் சரண்டர் ஆனது எப்போது தெரியுமா? இதே அஜீத்தே ரத்னத்திற்கு வலிய வந்து கால்ஷீட் கொடுத்தபோதுதான். 'எல்லாம் சாய்ராம் செயல்' என்று ஆபிஸ் வாசலிலேயே சாய்பாபா கோவிலை கட்டிவிட்டார் ரத்னம். அந்தளவுக்கு கடனிலிருந்து இவரை மீட்டார்கள் கண்ணுக்கு தெரியாத சாய்ராமும், கண்ணுக்கு தெரிந்த அஜீத்தும்.
இதோ- மறுபடியும் அஜீத்தின் மன்னிப்பு படலம் தொடர்கிறது.
தோள் கொடுக்கும் தோழனாக ஒரு காலத்தில் அஜீத்தின் அருகிலேயே இருந்த நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கு இப்போது மீண்டும் நட்பு கரம் நீட்டியிருக்கிறாராம் அஜீத். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று இருவருமே கசப்பு காலங்களை எரேஸ் பண்ணியது இன்டஸ்ட்ரியே மகிழ வேண்டிய சங்கதி.
சக்கரவர்த்தி கஷ்டத்திலிருக்காரு. அவருக்கு நான் உதவணும். அதனால் நம்ம இணைந்து தரப்போற படத்தை அவர் பேனர்ல பண்ணினால் என்ன என்றாராம் முருகதாசிடம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆகியிருக்கிறது.
இன்னொரு கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டுங்கண்ணே... சாய்ராம்!

No comments:

Post a Comment