Friday 5 October 2012

விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி கோடம்பாக்க கூட்டு பிரசாதம்


வரவர இந்தி ஃபீல்டு மாதிரி ஆகி வருகிறது தமிழ் ஃபீல்டும். ஒரு படத்தில் நாலைந்துJeyam Ravi - Arya - Jeeva - Vishalஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்கிற விஷயத்தில்தான் இந்த வியத்தகு மாற்றம். ஜீவா படத்தில் ஆர்யா நடிப்பதும், சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதும், விஷாலும் ஆர்யாவும் மாப்ளே மச்சானாகி குழைவதுமாக ஆரோக்கியமாகதான் இருக்கிறது ஃபீல்டு. (முகமூடி ஊத்திக்கிச்சுடோய்... என்று நடுநடுவே கொடுக்கப்படும் பார்ட்டிகள் இந்த கணக்கில் இல்லை)
ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் மதகஜராஜாவை தொடர்ந்து நான்கு முக்கிய ஹீரோக்களை ஒன்றிணைத்திருக்கிறார்.
விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய நால்வரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கப் போகிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக துவங்கி அதே சுவாரஸ்யத்தோடு முடிந்திருக்கிறது. இந்த அதிமுக்கியமான படத்தில் அச்சுபிச்சு வில்லனாக நடிக்கிறாராம் சந்தானம். பின்னே... அவரு இல்லாமலா?

த்ரிஷாவுக்கு தெரியாமல்... ஒரு அதிர்ச்சி விசிட்


ரெண்டு பூனைகள் தனியே ஒதுங்கி மியாவ்னு கொஞ்சும்போது கண்டும் காணாமல் போறதுதான் நாகரீகம். Trisha - Ranaஆனால் ஆந்திரா பூனை ராணாவும், தமிழ்நாட்டு பூனை த்ரிஷாவும் மியாவ் சொல்லும் போதெல்லாம் காதே டேமேஜ் ஆன மாதிரி கவலைப்படுகிறது கோடம்பாக்கம்.
'ரெண்டு பேர் லவ்வும் புட்டுகிச்சு தெரியுமா?' என்று புரளி கிளப்பவும் தவறுவதில்லை. பல நாட்களாக மனதை பொசுக்கும் இந்த விஷயத்தை ஜஸ்ட் லைக் தட் என்று இக்னோர் செய்து வந்த த்ரிஷா, அண்மையில் வெளிவந்த ஒரு கிசுகிசுவுக்கு மட்டும் விசாரணை போட்டாராம்.
வேறொன்றுமில்லை, த்ரிஷாவுக்கே தெரியாமல் சென்னை வந்தாராம் ராணா. அவர் யாரை சந்தித்துவிட்டு போனார் என்பதுதான் த்ரிஷாவின் விசாரணையாக இருந்திருக்கிறது.

டி.ராஜேந்தருடன் சிவகார்த்திகேயன் கோடம்பாக்கத்தில் அதிரடி அலேக்


யேய்ய் டண்டணக்கா... டமுக்குணக்கா என்று குரல் வருகிற திசையெல்லாம்T.Rajendran - Siva Karthikeyanடி.ஆரின் சங்க நாதம்தான் முழங்குறது! அவர் எவ்வளவு சீரியசாக நடித்தாலும், அதை ரசித்து சிரித்து என்ஜாய் பண்ணுகிற கூட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதுவரைக்கும் தன் நடிப்பை தானே இயக்கிக் கொண்டிருந்த டி.ஆர் வேறொருவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதே ரசிகர்களுக்கு கடவுள் கொடுத்த பம்பர் பலேக்காதான்!
இதென்ன ஹாட் நியூஸ் என்று கூகுளில் குழி தோண்டுகிற ஆசாமிகளுக்கு இதோ விரிவாக தருகிறோம் அதே நியூசை.
சமீபத்தில் ஒரு புதிய கதையோடு சிவ கார்த்திகேயேனை அணுகினார் ஒரு புது இயக்குனர். கதையை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த சிவ கார்த்திகேயேன் தான் சம்பளமாக கேட்டு வரும் பெரிய பெரிய லட்சங்களை சற்றே குறைத்துக் கொண்டதுடன், கால்ஷீட் தேதிகளையும் கேட்ட நேரத்தில் கொடுக்க முன்வந்தார். அதற்கு பெரிய காரணம் இருந்தது. சிவ கார்த்திகேயனோடு இணைந்து நடிக்கப் போகிறவர் டி.ராஜேந்தர்தான் என்று அந்த புதிய இயக்குனர் சொல்ல, அதற்கு கிடைத்த டிஸ்கவுன்ட்தான் சி.கா வின் இந்த சலுகை.
இந்த கதையில் நடிக்க டி.ஆரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இந்த செய்தியின் ஸ்பெஷல் திருப்பம்.

அஜீத்-சிம்பு இணைகிறார்கள் வரப்போகும் அதிரடி படம்


விட்டால் அஜீத் ரசிகர் மன்றத்தை மறுபடியும் சீரமைத்து அதற்கு அகில இந்தியSimbu - Ajithதலைவராகிவிடுவார் போலிருக்கிறது சிம்பு. வார்த்தைக்கு வார்த்தை அஜீத் புராணம் பாடி வரும் அவர் அடிக்கடி அஜீத்தை சந்தித்து எனர்ஜி ஏற்றிக் கொள்கிறார் என்பது ஊரறிந்த விஷயம். தற்போது நாம் சொல்லப்போகும் செய்திதான் ஹாட்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் இந்த படம் முடிந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து இன்டஸ்ட்ரிக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை தரப்போகிறார்கள். அது?
இருவரும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்! பல நாட்களாக அஜீத்திடம் சிம்பு வைத்துக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனும் இதுதான். எறும்பு வாக்கிங் போனால் கல்லே டேமேஜ் ஆகும்போது அஜீத் எம்மாத்திரம்? 'அதுக்கென்ன... செஞ்சுட்டாப்போச்சு' என்று சொல்லிவிட்டாராம்.
தனது அடுத்த படத்தை இயக்கப் போகும் சிறுத்தை சிவாவின் காதில் இப்போதுதான் இந்த விஷயத்தை போட்டாராம் அஜீத். வெத்தலைய மெல்லலாம்னு நினைச்சா வேப்பிலையை கொடுக்குறாங்களேன்னு ஆடிப்போயிருக்கிறாராம் சிவா.

லாரன்சை வறுக்கும் அனுஷ்கா ஏனிந்த கோபமம்மா?


அமைதி புறாவாக இருந்தாலும், அதை 'புறா 65' ஆக்குவதில் சிறந்த சமையல் கலைஞர்கள் நிறைந்த பீல்டுதான் சினிமா. சமீபத்தில் அப்படி 'புறா 65' ஆனவர் லாரன்ஸ்.
'காஞ்சனா' படத்தில் நடிக்க முதலில் அனுஷ்காவைதான் அழைத்தார் இவர். உன்anushkaரேஞ்ச் வேற, என் ரேஞ்ச் வேற என்று உதாசீனப்படுத்திய அனுஷ் லாரன்சை புறக்கணிக்க, அப்புறம் நடந்ததுதான் அதிசயம். படம் தாறுமாறான ஹிட்.
பிறகு தெலுங்கில் 'ரிபல்' என்ற படத்திற்காக கதை கேட்க அழைத்த லாரன்சுக்கு உடனே ரெஸ்பான்ஸ் காட்டினார் அனுஷ். ஆனால் அப்படத்தில் தொடர முடியாதளவுக்கு அனுஷ்காவை டார்ச்சர் செய்துவிட்டாராம் லாரன்ஸ். பிறகு இந்த கேரக்டரில் தமன்னா நடித்தார்.
அதுபோகட்டும்... நெட் ரிசல்ட் என்ன? ஆந்திராவில் ரிலீஸ் ஆன ரிபல், தாறுமாறான பிளாப்! நல்ல தூக்கலா பெப்பர் போட்டு லாரன்சை வறுத்துக் கொண்டிருக்கிறதாம் அனுஷ்கா ஏரியா!

துப்பாக்கியில் விஜய் யார்? -கதை இதோ...


'துப்பாக்கி' படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் விஜய் எந்த கேரக்டரில் நடிக்கிறார்? இதுதான் விஜய் ரசிகர்களையும் கோடம்பாக்கத்தையும் சுற்றி சுற்றி வரும் கேள்வி. vijay thuppaki lastest still(டைட்டில் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் சப்டைட்டிலோடு சேர்த்து இப்படி பேர் வைக்கலாமே என்று ட்விட்டரில் எரிச்சல் கிளப்புகிறார்கள் சிலர். 'துப்பாக்கி -வழக்கு நிலுவையில்' என்று பெயர் வைக்க சொல்லும் அவர்களை விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்களாக!)
விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்று கூறி இப்போதைக்கு ரசிகர்களின் யூகத்திற்கு ஒரு பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் முருகதாஸ். துப்பாக்கி கதையில் விஜய் யார்? தேடி திரிந்து விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல் இதுதான்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததல்லவா? அந்த நேரத்தில் தப்பிய தீவிரவாதிகள் சிலர் நாட்டுக்குள் ஊடுருவி விட்டார்களாம். இதையறிந்த ஒரு போலீஸ் அதிகாரி தனியாக யார் துணையும் இல்லாமல் அவர்களை கண்டுபிடித்து போட்டுத் தள்ளினாராம். இந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டுதான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யை போலீஸ் அதிகாரியாக காட்டாமல் மிலிட்டரி ஆபிசராக காட்டுகிறாராம் முருகதாஸ்.
முழுக்க முழுக்க மும்பையிலேயே படமாக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியில் காஜல் அகர்வால் விஜய்யை கண்டு இம்ப்ரஸ் ஆக மாட்டாராம். அவரை விஜய் ஒரு தலையாக காதலிப்பதாக போகிறதாம் காட்சிகள்.
அவ்ளோ பெரிய அப்பா டக்கராம்மா நீ

சூர்யாவை சீண்டியது ஏன்? கே.வி.ஆனந்தும் தைரியமும்!


பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு டிசம்பர் கச்சேரிதான் நடத்துவார்கள் பலK.V.Anandஇயக்குனர்கள். அதுவும் தொழில் முறை ஜால்ரா கலைஞர்களை கூட தோற்கடித்துவிடும் இவர்களது பேச்சு. ஆனால் சமீபத்தில் 'மாற்றான்' பிரஸ்மீட்டில் பேசிய கே.வி.ஆனந்த், சூர்யாவை வைத்துக் கொண்டே ஹீரோக்களின் தலையில் ஒரு நச் குட்டு குட்டியது இன்டஸ்ட்ரியை குழம்ப வைத்திருந்தது. ஏன் இந்தாளு இப்படி பேசினாரு, அவ்ளோ டார்ச்சர் கொடுத்திருப்பாரோ சூர்யா? என்றெல்லாம் ஆளாளுக்கு யூகங்களை கிளப்ப, கடைசியாக உண்மை வந்தாச்சு...!
கடந்த ஆடிப்பெருக்கு அன்று ரஜினி படத்தை இயக்குவதற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம் கே.வி.ஆனந்த். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, துணைக்கு ஈராஸ் நிறுவனமும் கை கோர்க்கிறதாம் இந்த பிராஜக்டில்.
தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நடிகரையே மயக்கியாச்சு. இனி சூர்யாவாவது, ஆர்யாவாவது? அதனால்தான் சூர்யாவை கீறுகிற மாதிரி பேசிவிட்டார் ஆனந்த்.
பரமசிவன் கழுத்திலிருந்து ஸ்நேக் சீறுச்சு... கருடா சவுக்கியமா?

நமீதா வேண்டாம்ங்க... நடிகர் ஆர்.கே அச்சம்


நடிகர் ஆர்.கே இப்போ ரியல் எஸ்டேட்டுக்கு வந்துட்டாரு. யாருக்கும் அடங்காதR Kஜல்லிக்கட்டு காளைதான் சினிமா. கொஞ்சம் அசந்தா போதும், தாவங்கட்டையே பேத்து டிஞ்சர் போட வைக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் கூட இருக்கலாம் இந்த தொழில் மாற்றம்.
எங்கு எதை செய்தாலும் அதில் இருக்கிற நுணுக்க விளக்கங்களை புரிந்தவர் ஆயிற்றே? இந்த முறை அவர் செய்யப் போகும் விஷயம் நிஜமாகவே சூப்பர். வாழ்க்கையில புண்ணியத்தை சேர்க்குறியோ இல்லையோ? அரை கிரவுண்டு நிலத்தை சேர்த்து வச்சா சந்ததிகள் போற்றும் என்பதுதான் இவரது லேட்டஸ்ட் பொன்மொழி. அப்படி சேர்க்கும் அந்த அரை கிரவுண்ட் நிலத்தை பாதுகாப்பதுதான் சினிமா எடுப்பதை விட சிக்கலான விஷயம்.
இப்படி ஒரு நிலத்தை யார் வைத்திருந்தாலும் வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய்R Kஇவரிடம் கட்டிவிட்டால் அந்த இடத்தை ஒரு வருடத்திற்கு பாதுகாத்து தருவாராம் ஆர்.கே. இப்படி வருஷா வருஷம் கட்டினால் கட்டுகிற வரைக்கும் நிலம் இவர் பார்வையில் இருக்குமாம். இதற்காக தமிழகம் முழுக்க சுமார் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிற திட்டத்தை வைத்திருக்கிறார் (கேட்க நல்லாயிருக்கு. செயல்படுத்தணுமே?)
இத்துடன் லக்சுரி பிளாட்ஸ் கட்டுகிற திட்டத்தையும் வைத்திருக்கிறார். நல்லவேளை, இந்த புது பிளாட் அறிவிப்புக்கு எந்த நடிகர் நடிகைகளையும் அழைத்து வரவில்லை அவர். 'கடந்த முறை ஒரு நிகழ்ச்சிக்கு நமீதாவை அழைச்சுட்டு வந்தேன். நானும் அவரும் சேர்ந்து பிசினஸ் பண்றதா எழுதிட்டாங்க. அதனால் இனிமேல் ஸோலோ பர்பாமென்ஸ்தான்' என்றார் ஆர்.கே.