இது பட்டாபிஷேகமா, கெட்டாபிஷேகமா என்பதே தெரியாத அளவுக்கு ஆகிவிட்டது சமந்தாவின் கோயில் விசிட்! 'நாங்க கோவிலுக்கு வந்தது எங்க பர்சனல். அதை பற்றி கிளறயாருக்கும் ரைட்ஸ் கிடையாது' என்று ட்விட்டரில் கோபப்பட்டிருக்கிறார் சித்தார்த். வாதம் என்று எடுத்துக் கொண்டால் சித்தார்த்தின் கருத்து சரிதான். இருந்தாலும் பிரபலங்கள் 'பினாயில்' வாங்கினால் கூட அதை எட்டு கால நியூசாக்கும் ஊடகங்கள் இதை எப்படி சும்மா விடும்?
சரி விஷயத்துக்கு வருவோம். சமந்தாவும் சித்தார்த்தும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தியை படித்த நாளிலிருந்து கெட்ட சொப்பனம் பிடித்தலைகிறார்கள் கோடம்பாக்கத்தில் பலர். 'என்னோட அடுத்த படத்துல சமந்தாதான் ஹீரோயின்' என்று சொல்லி வந்த பிரபல டைரக்டர்கள் கூட ரூட்டை மாத்து என்று வேறு வேறு நடிகைகளின் மொபைல் நம்பர்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள்-.
முதல் சந்தேகம் லிங்குசாமி அலுவலகத்திலிருந்துதான் என்கிறது கோடம்பாக்கத்து எலி. இவர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தாவைதான் யோசித்து வைத்திருந்தாராம். அந்த எண்ணம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறதாம். அவரை சொல்லி குற்றமில்லை. ஒரு நடிகைக்கு திருமணம் ஆகப் போகிறது என்ற தகவலை கேட்டாலே போதும், ஒரு சின்ன 'கட்'டிங்கில் ஒரு வாட்டர் பாட்டிலையே நிரப்பிய மாதிரி நீர்த்துப் போகிறது அவரவர் மிக்சிங்!
அதனால், கோடிக்கணக்கில் கொட்டுவதற்கு முன்பு நாலும் பார்ப்பது நல்லதுதானே!
No comments:
Post a Comment