Friday, 5 October 2012

துப்பாக்கியில் விஜய் யார்? -கதை இதோ...


'துப்பாக்கி' படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் விஜய் எந்த கேரக்டரில் நடிக்கிறார்? இதுதான் விஜய் ரசிகர்களையும் கோடம்பாக்கத்தையும் சுற்றி சுற்றி வரும் கேள்வி. vijay thuppaki lastest still(டைட்டில் விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் சப்டைட்டிலோடு சேர்த்து இப்படி பேர் வைக்கலாமே என்று ட்விட்டரில் எரிச்சல் கிளப்புகிறார்கள் சிலர். 'துப்பாக்கி -வழக்கு நிலுவையில்' என்று பெயர் வைக்க சொல்லும் அவர்களை விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்களாக!)
விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவில்லை என்று கூறி இப்போதைக்கு ரசிகர்களின் யூகத்திற்கு ஒரு பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் முருகதாஸ். துப்பாக்கி கதையில் விஜய் யார்? தேடி திரிந்து விசாரித்ததில் நமக்கு கிடைத்த தகவல் இதுதான்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததல்லவா? அந்த நேரத்தில் தப்பிய தீவிரவாதிகள் சிலர் நாட்டுக்குள் ஊடுருவி விட்டார்களாம். இதையறிந்த ஒரு போலீஸ் அதிகாரி தனியாக யார் துணையும் இல்லாமல் அவர்களை கண்டுபிடித்து போட்டுத் தள்ளினாராம். இந்த உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டுதான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யை போலீஸ் அதிகாரியாக காட்டாமல் மிலிட்டரி ஆபிசராக காட்டுகிறாராம் முருகதாஸ்.
முழுக்க முழுக்க மும்பையிலேயே படமாக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியில் காஜல் அகர்வால் விஜய்யை கண்டு இம்ப்ரஸ் ஆக மாட்டாராம். அவரை விஜய் ஒரு தலையாக காதலிப்பதாக போகிறதாம் காட்சிகள்.
அவ்ளோ பெரிய அப்பா டக்கராம்மா நீ

No comments:

Post a Comment