Friday, 5 October 2012

சூர்யாவை சீண்டியது ஏன்? கே.வி.ஆனந்தும் தைரியமும்!


பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு டிசம்பர் கச்சேரிதான் நடத்துவார்கள் பலK.V.Anandஇயக்குனர்கள். அதுவும் தொழில் முறை ஜால்ரா கலைஞர்களை கூட தோற்கடித்துவிடும் இவர்களது பேச்சு. ஆனால் சமீபத்தில் 'மாற்றான்' பிரஸ்மீட்டில் பேசிய கே.வி.ஆனந்த், சூர்யாவை வைத்துக் கொண்டே ஹீரோக்களின் தலையில் ஒரு நச் குட்டு குட்டியது இன்டஸ்ட்ரியை குழம்ப வைத்திருந்தது. ஏன் இந்தாளு இப்படி பேசினாரு, அவ்ளோ டார்ச்சர் கொடுத்திருப்பாரோ சூர்யா? என்றெல்லாம் ஆளாளுக்கு யூகங்களை கிளப்ப, கடைசியாக உண்மை வந்தாச்சு...!
கடந்த ஆடிப்பெருக்கு அன்று ரஜினி படத்தை இயக்குவதற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம் கே.வி.ஆனந்த். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, துணைக்கு ஈராஸ் நிறுவனமும் கை கோர்க்கிறதாம் இந்த பிராஜக்டில்.
தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச நடிகரையே மயக்கியாச்சு. இனி சூர்யாவாவது, ஆர்யாவாவது? அதனால்தான் சூர்யாவை கீறுகிற மாதிரி பேசிவிட்டார் ஆனந்த்.
பரமசிவன் கழுத்திலிருந்து ஸ்நேக் சீறுச்சு... கருடா சவுக்கியமா?

No comments:

Post a Comment