Thursday, 10 November 2011

ஸ்ரேயா, த்ரிஷா பயம்


முயல் குட்டி முண்டா தட்டினால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? ஸ்ரேயாவின் உறுதியும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. தெலுங்கானாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர். அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆனதுதான் போன வார டாப் நியூஸ்.
Shreya
இந்த சம்பவம் நடந்து ரெண்டு நாட்கள் கழித்து இதே ஆந்திராவில் படப்பிடிப்பு. நெஞ்சு படபடக்க ஸ்பாட்டுக்கு போயிருந்தார் த்ரிஷா. படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர். இவரது குடும்பமே கோக்கு மாக்கான துப்பாக்கி குடும்பம். த்ரிஷாவின் அச்சத்தை கண்ட ஜூனியர் என்.டி.ஆர், இது நம்ம ஏரியா. ஒரு பய வாய திறக்க மாட்டான். தைரியமா இரு என்றாராம்.
எங்காவது ஸ்டுயோவுக்குள் செட் போட்டு படமாக்கலாமே என்ற த்ரிஷாவின் யோசனையை தனது நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் தகர்த்தெறிந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹீரோ சொன்ன மாதிரி அந்த ஏரியா பக்கமே கலவரக்காரர்கள் வருவதில்லையாம். ஜூனியர் என்.டி.ஆரின் நிஜ ஹீரோயிசத்தை கண்டு திறந்த வாயை மூடாமல் ரசித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

No comments:

Post a Comment