Thursday, 19 July 2012

சுந்தர்சி இயக்கும் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு


பேட்டை புடிச்சமா, பந்தை அடிச்சமா என்றிருந்த கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் திடீரென்று சினிமா ஆசை உந்தித்தள்ள கிரவுண்டை விட்டு ஃபுளோருக்கு வந்தார். வந்த இடத்தில் Sadagopan Rameshசிக்சர் நிச்சயம் என்று எதிர்பார்த்தால், ஒரு பால் கூட அவர் பேட்டில் சிக்கவில்லை. நல்லவேளை... ஸ்டெம்ப் எகிறாமல் இருப்பது அவரது பூர்வஜன்ம புண்ணியம்.
இவரது முதல் படமான பட்டாப்பட்டி பார்ப்பதற்கு ஜனரஞ்சகமாக இருந்தாலும், போஸ்டர் காசு கூட தேறவில்லை என்கிறது கலெக்ஷன் ஏரியா. அதன்பின் சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் சுந்தர்சி.
விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்து வரும் மதகஜராஜா படத்தில் சடகோபன் ரமேஷுக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் கொஞ்சம் கலகலப்பான கேரக்டர். ஆள் பார்க்க முசுடாக இருந்தாலும் கேமிராவுக்கு முன்னால் கலகலப்பாக இருக்கிறார் என்கிறது ஷுட்டிங் ஸ்பாட் தகவல்கள்.
(மதகஜ)ராஜா தயவுல ஒரு சின்ன ராஜ்ஜியத்தையாவது கோடம்பாக்கத்துல புடிச்சுக்கோங்க சடகோபன்.

ரெண்டு சூர்யாவும் ஒரு காஜலும்... ஒரு கலாச்சார கசமுசா?


ஒரு சூர்யா வந்தாலே உற்சாகத்தில் உய்..... யடிக்கிற ரசிகர்கள் ரெண்டு சூர்யா வந்தால் Maatraanஎன்ன செய்வார்களோ? அதைக் காண இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ரிலீஸ் எப்போது என்று உறுதியாக சொல்ல முடியாத நெருக்கடி எதிர்பார்க்கிற நமக்கு மட்டுமல்ல, உருவாக்குற கே.வி.ஆனந்துக்கும் இருக்கிறது.
இரண்டு சூர்யா என்பதால் ஒவ்வொரு காட்சியையும் இரண்டு முறை எடுக்க வேண்டியிருந்ததாம். என் நிலைமையாவது பரவாயில்லை. ஒவ்வொரு காட்சியையும் பல முறை பார்த்து பார்த்து நறுக்க வேண்டிய நிலைமை எடிட்டர் ஆன்ட்டனிக்கு. அவர் ரெண்டு சம்பளம் கேட்டார் என்றால் பாருங்களேன் என்றார் கே.வி.ஆனந்த்.
ரெண்டு பேர்ல காஜல் யாருக்கு என்ற அடங்க மாட்டாத கேள்வியை அவரிடம் கேட்டால், இப்பவே ஏன் கேட்கிறீங்க அதையெல்லாம்? அதுதான் சார் க்ளைமாக்ஸ் என்றார் அவர். எஸ்கேப் ஆக அவர் நினைத்தாலும் விடுகிற நிலையில் நாம் இல்லை. விசாரித்த வரையில் ரெண்டு பேரோடும் குடும்பம் நடத்த தயாராகிவிடுவாராம் காஜல். இப்படி ஒரு அதிரி புதிரியான க்ளைமாக்ஸ் படத்தில் இருக்குமா? அல்லது கலாச்சாரம், பண்பாடு என்று ஜகா வாங்குவார்களா தெரியாது

அமிதாப்புக்கு ஜோடியாகிறார் குஷ்புவின் அடுத்த ஸ்டெப்!


அறிவாலயத்திற்காக அரசியல், சுய லாபத்திற்காக சினிமா என்று இரட்டை குதிரை சவாரி செய்யும் குஷ்புவுக்கு ரெண்டு குதிரையையும் சரியாக மேய்க்கKushbooதெரிந்திருக்கிறது. மீட்டிங், போராட்டம், ஜெயில், பெயில் என்று சகல வித்தைகளையும் அரசியலில் காட்டிக் கொண்டிருக்கும் குஷ்பு அதற்காக சினிமாவையும் விட்டுவிடவில்லை. இது போதாதென்று மானாட மயிலாடவில் ஜட்ஜ் பொறுப்பும் கூடுதலாக சேர்ந்து விட்டது. (ஏதோ இ.பி.கோவை கரைச்சு குடிச்ச மாதிரி இவங்க பண்ணுற அட்டகாசம்? ஹவ்வவ்வவாஆ....)
எதற்கும் அசராத குஷ்பு இப்போது நடிப்பிலும் இறங்கியிருக்கிறார். தெரிந்த தொழில்தானே, இதிலென்ன ஆச்சர்யம் என்பவர்களுக்கு... இவ்வளவையும் கவனித்துக் கொண்டு குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துகிற அம்மாவாக இருப்பது கஷ்டமல்லவா? அதையும் திறம்பட செய்து கொண்டிருக்கிறார் அவர். எவ்வளவுதான் முக்கியமான காட்சியென்றாலும் ஆறு மணிக்கு பேக்கப் சொல்லிவிடுவாராம். அதற்கு பிறகு அது அவரது குழந்தைகளுக்கான நேரம்.
சரி... சென்னையில் இருக்கும்போதுதான் இதெல்லாம் சாத்தியம். இந்தியில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாரே, என்ன பண்ணுவாராம்? இந்த கேள்வி இப்போது ரசிகர்கள் மத்தியில் எழப்போகிறது. டைரக்டர் ரேவதி வர்மா இயக்கவிருக்கும் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் குஷ்பு. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா? அமிதாப்புக்கு!
அம்மாவுக்கு டெல்லி அரசியல் மீதும் ஒரு கண் இருக்கோ, என்னவோ?

பத்து கோடியா, வாவ்... ஒரு விஸ்வரூப பாய்ச்சல்


புதுப்படங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது ஜெயாViswaroopamதொலைக்காட்சி. கோச்சடையான், துப்பாக்கி, மாற்றான் என்று வேகம் காட்டும் ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் மட்டும் சிக்கவில்லை.
காரணம் கமல். ஆரம்பத்திலிருந்தே விஜய் தொலைக்காட்சி மீதுதான் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் தற்போதைய அவரது முயற்சிக்கு முழு மூச்சாக தோள் கொடுத்திருக்கிறதாம் விஜய்.
கமலின் விஸ்வரூபத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள். சுமார் பத்து கோடி என்று காதை கடிக்கிறார்கள். இந்த அடங்காத விலையை கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறது பிற சேனல் வட்டாரங்கள். இதுல பாதி கேஷ் ரொக்கம். மீதி கேஷ் விளம்பரத்துக்கு என்று பிரித்துக் கொண்டார்களாம்.
நிகழ்ச்சியிலும் சரி, மகிழ்ச்சியிலும் சரி, ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்கிற அளவுக்கு சேனலோடு சினேகம் வளர்க்கிறார் கலைஞானி.

கண்டிப்பா கிளாமர் வேணும்... பிடிவாதம் பிடிக்கும் ஸ்ரே


என்னது... படத்துல எனக்கு கிளாமர் ரோல் இல்லையா? அப்படின்னா உங்க படமேshreyaவேணாம்' என்கிற அளவுக்கு திறந்த புத்தமாக திரிபவர் ஸ்ரேயா. அப்படி ஒரு அசாத்திய கொள்கையால் இவர் கைவிட்ட படங்கள் ஆறேழு இருக்கும்.
இந்த கவர்ச்சிக் கொள்கையில் கொசு மருந்து அடித்து ஸ்ரேயாவை லபக்கி விட்டார் டைரக்டர் ரூபா ஐயர். இவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'சந்திரா' என்ற படத்தில் ஸ்ரேயாவின் நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம்.
இருந்தாலும் முந்தானை சரிய சரிய ஸ்ரேயா வரும் காட்சிகள் ஒன்றிரண்டு படம் பார்க்கும் ரசிகர்களை ராத்தூக்கம் இல்லாமல் செய்துவிடும் என்கிறார்கள். இந்த சீன்கள் கூட ஸ்ரேயாவின் விருப்பத்தின் பேரிலேயே வைக்கப்பட்டதாம்.
வெத்தல கொடி வேர்ல சுண்ணாம்பை கரைச்சு ஊத்துனா மாதிரிதான் அமையுது சில பொருத்தங்களும்!

Monday, 26 March 2012

சங்கீத பிட்டு,சம்மதித்தார் நயன்

தாம்பூலத்தை மென்று தாம்பாளத்தில் துப்பினாலும், அதையும் ஆரத்தியா மதிச்சு ஆராதிக்கறதுதான் Simbu - Nayantharaகாதலின் சக்தி. இந்த சக்தி இப்போது இன்னும் முத்திப் போயிருக்கிறது சிம்புவிடம். இல்லையென்றால் பழைய பாசத்தில் வலை வீசிக் கொண்டிருப்பாரா?
இவரே இசையமைத்து பாடிய லவ் ஆங்த்தம் ஆல்பத்தில் வருகிற ஒரே ஒரு சங்கீத பிட்டுக்கு நயன்தாராவை ஆட அழைத்தாராம். படத்தில் என்னோடு சேர்ந்து நடிக்கலைன்னாலும் பரவாயில்லை. இந்த ஆல்பத்தில் ஒரு சீனுக்கு தலை காட்டினால் போதும் என்றாராம். இவ்வளவுக்கு பிறகும் கர்ஜனை செய்ய நயன் என்ன லயனா?
வரம் கொடுக்க தயாராகிவிட்டதாம் தேவதை.
சிம்பு பொண்ணு பார்க்கிற நேரத்தில் இதென்ன புது கலாட்டா?

அந்தகால ஸ்ரீதேவி அடங்காத சர்ச்சை ஒன்று

யானை எடை மிஷின்ல ஏறிய மாதிரி, மனசு கொள்ளாத வெயிட்டோடுதான் நடந்து கொள்கிறார் 'அந்தகால' ஸ்ரீதேவி. (மயிலு ஆற்றை Srideviகடக்குற சீனை இப்ப பார்த்தாலும், பாக்குறவாளுக்கு மூச்சு பிடிப்பே வரும் தெரியுமோ?) முன்பெல்லாம் மும்பையை சுற்றியே ரவுண்டடித்து வந்த இந்த சிவகாசி பொண்ணு(?) இப்ப அடிக்கடி சென்னை பக்கமும் ரவுண்ட் வர ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது மகளை பெரிய ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு.
பொண்ணு மேலே வரணும்னு ஆசைப்படுறது எல்லா அம்மாக்களுக்கும் பொதுவான விஷயம்தான். ஆனால் இவரும் ஒரு பொண்ணு மாதிரியே டிரஸ் கோடுடன் வருவதுதான் ஒரு அடங்காத லுக்கை கொடுக்கிறது. இதை மேலோட்டமாக ரசித்துவிட்டு போகாமல் ஒரு பெரிய பிரச்சனையாக்கிக் கொண்டிருக்கின்றன சில அமைப்புகள்.
மும்பையை சேர்ந்த சில பெண்கள் அமைப்பினர், 'இனிமேல் அவர் எந்த விழாவுக்கு வந்தாலும் அடக்க ஒடுக்கமா டிரஸ் பண்ணிட்டு வரணும். அவர் போடுற மிடி தொடை வரைக்கும் காட்டுது. அவரு வயசுக்கு இது சரியல்ல' என்கின்றன.
மயிலு... ஒரு தடவ பழைய படத்தை காட்டும்மா அவங்களுக்கு.