Wednesday, 21 December 2011

கிளம்பினார் சினேகா கேரளாவில் அதிர்ச்சி


வெற்றிலை பாக்கு, வெட்டிங் கார்டு என்று சினேகாவின் அடுத்த ஸ்டெப், இனிக்கsnehaஇனிக்க இல்லறம்தான். ஆனால் விடைபெறுகிற நேரத்தில் வேதனை தருகிறாரே, அதுதான் ஏனென்றே புரியவில்லை என்கிறது கேரள நாட்டிளம் தகவல் ஒன்று. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்ஷன் ‘பவானி’ எவ்விதத்திலும் அட்ராக்ஷன் ஏற்படுத்தவில்லை தமிழ் ரசிகர்களை. புதிய படங்களும் இல்லாமல் மலையாள கரையோரம் ஒதுங்கிய சினேகா, பத்மகுமார் என்ற இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அறுபது வாட்ஸ் புன்னகையோடு செட்டைவிட்டு கிளம்பிய சினேகா, மறுநாள் வரவேயில்லையாம். வாடிப்போன இயக்குனர் சினேகா தங்கியிருந்த இடத்தை செக் பண்ணினால் பார்ட்டி முதல் நாளே அங்கிருந்து எஸ்கேப். இங்கே தமிழில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க அழைத்தார்கள் அல்லவா? அந்த கோச்சடையான் போட்டோ ஷுட்டுக்கு வந்துவிட்டாராம். பிரசாந்துக்கே தங்கையாக நடித்த சினேகா, ரஜினிக்கு தங்கையாக நடிக்கப் போவதை பற்றியா அதிகம் கவலைப்படப் போகிறார்?
சரி போனவர் போகட்டும் என்று சமாதானப்படுத்திக் கொண்ட கேரள யூனிட், சினேகாவுக்கு பதிலாக ஹரிப்ரியாவை நடிக்க வைத்தார்களாம்.

No comments:

Post a Comment