Wednesday, 9 November 2011

பிரசன்னா - சினேகா மீண்டும் காதல்!


Sneha - Prasannaநடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்துநடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருவரும் இதுகுறித்து முதலில் மறுப்பும் மலுப்பலும் தெரிவித்தனர். ஆனால் இவர்களது காதல் வலுவானது என்பதை இப்போது நிரூபித்து விட்டார்கள். தற்போது சரத்குமாருடன் விடியல் என்ற படத்தில் நடித்து வரும் சினேகா. விளம்பரங்களின் தேவதையாக ஜொழித்து வருகிறார். பிரச்சன்னாவோ தமிழ் சினிமாவின் வெர்சடைல் கலைஞராக, நாயகன், வில்லன் என கலவையாகவும், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் துணிவாகவும் நடித்து வருகிறார்கள். ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்சினிமாவின் முக்கிய ஸ்டாராக இருக்கும் பிரசன்னா, விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமான சினேகாவை முழுமனதோடு விரும்பியிருக்கிறார்.
கோடம்பாக்கத்தின் நிகழ்கால புன்னகை இளவரசி என கொண்டாடப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவர்களது காதல் திருமணம், இருவீட்டாரின் சம்மதத்துடன் முதலில் நிச்சயதார்த்தமும் பிறகு திருமணமும் நடக்கவுள்ளது. ஜனவரி மாதம் திருமணம் என பிரசன்னா வட்டாராங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து நடிகர் பிரசன்னா இன்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
“ சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே அறிவிக்கிறோம்," என்று கூறியிருக்கிறார். 

No comments:

Post a Comment